பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

எல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது ஒலிக்காத போதும் பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது அசையாதபோதும் வானம் முழுதும் மேகங்கள் தனித்திருக்கையிலும் சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது யாரும் உச்சரிக்காதபோதும் எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன சாலைகளே இல்லாத போதும் எல்லாமும் விரைகின்றன அவற்றின் இருத்தலை நோக்கி – ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry) ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html தமிழில் : சித்தார்த் புகைப்பட மூலம் : http://www.flickr.com/photos/chemilo/3669746390/in/photostream/ மணி காற்றால் நிரம்பியிருக்கிறது ஒலிக்காத போதும் பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

வியட்நாம்

  வியட்நாம் ”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.” ”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.” ”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.” “எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.” ”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.” ”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.” “யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.” “இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.” ”உன்னோட கிராமம் இன்னும் […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

ஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.

மரத்தில் எஞ்சியிருக்கும் கடைசி இலைக்கு பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா? வாய்க்கும். உச்சிவெயிலில் தரையில் ஒரு சிற்றெறும்பு நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம். காற்றில் ஆடியபடி தொடர்ச்சியாக எறும்பின் பாதையில் நிழலிட அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம். ஆட்டத்தின் உச்சத்தில் இலை மரத்தை விட்டு அகலலாம். அப்போதும், ஓர் குடையாய் எறும்பின் மேலேயே விழ வாய்த்தால், தாய் வந்து குட்டியை ஒளித்ததற்காக கண்சிவக்க கோபிக்கும் வரை அந்த இருப்பு தொடருமானால், அதுவே பெருமகிழ்ச்சி. – வீரன்குட்டி. மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993 […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

எளிமை – மலையாள கவிதை

எளிமை எனது இருப்பை அறிவிக்கஒரு சிறு கூவல். நான் இங்கு இருந்ததை கூற ஒற்றைச் சிறகுதிர்ப்பு இனியும் இருப்பேன் என்பதன் சாட்சியாய் அடைகாத்தலின் வெம்மை எப்படி இயல்கிறது பறவைகளுக்கு இத்தனைச் சுருக்கமாய் தங்கள் வாழ்வினை கூற? – பி. பி. இராமசந்திரன் தமிழில் : சித்தார்த். மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010

பிரிவுகள்
இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை

பிரதீபன் கவிதைகள்

ராஜமார்த்தாண்டன் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

கவிதை – ரோபர்டோ யூரோஸ்

ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம், ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம். ஆனாலும் இவற்றின் இணைவு நமை சுவாசிக்க செய்கின்றது. எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல், எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல். ஆனாலும் இவற்றின் இணைவு நமை மீண்டெழச் செய்கின்றது. எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு, எல்லா மரணமும் இன்னொரு உரு. ஆனாலும், இவற்றின் இணைவு நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது. – ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து) யூரோஸின் சில […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

வென்றவர்கள்

வென்றவர்கள் – யோ ஃபெங் எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள் பலர் வழியிலேயே இறக்க எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர். காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர். அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும் உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை. காமெராக்கள் காட்டாது விட்டன அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை. அவர்கள் சுமைதூக்கிகள் வென்றவர்களாய் கருதப்படுவதில்லை இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால் சோமோலுங்மாவை* வெல்ல யாருக்கும் உதவுவார்கள் அவர்கள். சோமோலுங்மா – இமய மலையின் திபெத்திய பெயர். ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…

”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல… விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது. சமீபத்தில் வரலாறை மையமாக […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

ஒளியை நோக்கி – சீனக்கவிதை

ஒளியை நோக்கி – யோ ஃபெங் (சீனா) விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு இனி இருள் யாரது, விட்டில் பூச்சியை தடுத்து இருளில் வசிக்கப் பழக்குவது? முடிவற்ற பயிற்சிக்குப் பின் அதன் சிறகுகள் முறிகின்றன பறக்கவியலாது அந்தியை இழுத்தபடி நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது ஒளியை நோக்கி ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சித்தார்த்.

பிரிவுகள்
இலக்கியம் கடந்து சென்ற கவிதை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு

உயரத்திருந்து யாசித்தல்

பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 – 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் […]