பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் : ஆண்டாள் திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் குத்து விளக்கு எரிய, யானைத்தந்தத்தினால் செய்த கால்களையுடைய கட்டிலின் மேல், மெத்தென இருக்கும் மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக பூவினை […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

உந்து மத களிற்றன் : ஆண்டாள் திருப்பாவை – 18

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். நிற்காது ஓடும் மதம் பிடித்த யானையை உடையவனும் எதிரிகளைக் கண்டு அஞ்சி ஓடாத தோள் வலிமைக் […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

அம்பரமே தண்ணீரே : ஆண்டாள் திருப்பாவை – 17

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். உடையும் நீரும் உணவும் அளிக்கும் எங்கள் கடவுளே! நந்தகோபாலா! எழுந்திரு. இளந்தளிர் போன்ற பெண்களுக்கெல்லாம் கொழுந்தானவளே! குலவிளக்கே! யசோதா! நீயாவது எழுப்பேன். வாமன அவதாரமெடுத்து ஓங்கி வளர்ந்து வானை அறுத்து […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

கடந்து சென்ற கவிதைகள் சில

மனதிற்கு மிக அருகில் வந்த கவிதைகளை, எக்காலத்தைச் சேர்ந்தவையாயினும், அவற்றை “கடந்து சென்ற கவிதைகள் சில” என வகைப்படுத்தி இங்கு பதித்து வைக்கலாம் என பார்க்கிறேன். தேவதைக்கதைகளில் இலக்கறியாது பயணிக்கும் சிறுமி போகும் வழியெல்லாம் அடையாளத்திற்கு ரொட்டித்துண்டுகளை வீசியபடி போவதில்லையா… மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

மணிக் கதவம் தாள் திறவாய் : ஆண்டாள் திருப்பாவை – 16

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் குலத் தலைவனாக நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே! கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே ! மணிக் கதவை திற. […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

கவிதையில் ஓர் உரையாடல் : ஆண்டாள் திருப்பாவை – 15

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோசில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் இவர்கள்: ஏய் இளம் கிளியைப் போன்றவளே! இன்னுமா உறங்குகின்றாய்? அவள் : சில்லன்று கத்தாதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன். இவர்கள் : வாய்ப்பேச்சில் வல்லவளே […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை – 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

புள்ளின் வாய் கீண்டானை – ஆண்டாள் திருப்பாவை – 13

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பறவை வடிவில் வந்த அரக்கனை கொன்றவனின், பொல்லாத அரக்கன் ஒருவனைக் கிழித்துக் கொன்றவனின் புகழைப் பாட பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் : ஆண்டாள் திருப்பாவை – 12

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் கனைக்கும் கன்றின் ஒலிகேட்டு அதற்காய் இரக்கப்படும் தாய்ப்பசுவின் மடியிலிருந்து பால் சுரக்க, அந்தப்பால் அவ்வீட்டினை […]

பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி : ஆண்டாள் திருப்பாவை 11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து  செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்  குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே  புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்  சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்  முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட  சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ  எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்  கறவை மாடுகள் பல கறக்கும்,  பகைவரின் வீரம் அழியும் வண்ணம் அவர்களை வெல்லும், குற்றமேதும் இல்லாத கோவலர் இனத்தின் பொற்கொடியே! பாம்பின் […]