மூடிய சிறிய அறைகள் எனக்கு என்றுமே பயம் அளிப்பவை. குறுகிய வெளியில் அடைபட்டு கிடப்பதை போல நினைத்துப்பார்த்தாலே உடல் பயத்தில் சிலிர்த்துக்கொள்ளும். ஒரு குறுந்தொகை பாடல் உண்டு… அந்த கவிதையை, அதன் ஆதார உவமையை நினைக்கும் போதெல்லாம் இந்த claustrophobic உணர்வு வரும்… இடிக்கும் கேளிர்! நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே! வெள்ளிவீதியார் (குறுந்தொகை – 58) இந்த காதல் கட்டுப்படுத்தப்பட […]
இந்த புயலும் கடந்து போகும். ஆனால் இப்போதைய நமது தேர்வுகள் இனி வரும் ஆண்டுகளில் நம் வாழ்வை மாற்றலாம். ஆங்கில மூலம்: https://www.ft.com/content/19d90308-6858-11ea-a3c9-1fe6fedcca75 மனித இனம் ஒரு உலகலாவிய சிக்கலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையின் ஆகப்பெரிய சிக்கலாக இது இருக்கலாம். அடுத்த சில வாரங்களில் அரசுகளும் மக்களும் எடுக்கும் முடிவுகள் இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கு நமது எதிர்காலத்தை வடிவமைக்கலாம். நமது சுகாதார அமைப்புகளை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தை, அரசியலை, பண்பாட்டையுமே கூட மாற்றலாம். நாம் துரிதமாகவும் […]
ஆங்கில மூலம் : https://time.com/5803225/yuval-noah-harari-coronavirus-humanity-leadership/ கொரோனாவைரஸ் கொள்ளைநோய்க்கு பலரும் உலகமயமாக்கத்தைப் பழி சொல்கின்றனர். இது போன்ற நோய்ப்பரவல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி சுருங்கிக்கொள்வதே என்று எண்ணுகின்றனர். மதில்களை எழுப்புதல், பயணங்களை கட்டுப்படுத்துதல், வணிகத்தைச் சுருக்கிக்கொள்ளுதல். குறுகிய கால தனிமைப்படுத்துதல் கொள்ளை நோயின் பரவலைத் தடுப்பதற்கு அவசியம் தான்; ஆனால் நீண்ட கால தனிமைப்படுத்துதல், நோய்த் தொற்றுக்கு எதிரான எந்த வித உண்மையான பாதுகாப்பையும் அளிக்காது என்பது மட்டுமல்ல, பொருளாதார சீர்குலைவிற்கும் இட்டுச்செல்லும். கொள்ளை நோய்களுக்கான உண்மையான முறிமருந்து […]
Women’s Day
Originally posted on Sampreethe's Journal:
Today I am going to talk about women in honour of women’s day.. Being a 10 year old , have I got the rights to talk about women? Yes I do.. I will tell you why. In a place where people didn’t know the true meaning of freedom for…
LETS HELP !
Originally posted on Sampreethe's Journal:
Let’s get up Let’s cheer For what god brings us Every day Let’s thank him for his help But we’re not the only ones There are people out there who need our help Let’s get up Let’s get moving Do your thing and start helping
ஒரு தனித்த மானுட குரல்…
2015ஆம் வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கிய ஸ்வெட்லெனா அலெக்ஸ்சோவிட்ச் எழுதிய “Voices from Chernobyl : The Oral History of a Nuclear Disaster” என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதியில் மொழிபெயர்ப்பு இது. செர்னோபில் சம்பவத்தை அதில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கொண்டு எழுதப்பட்ட நூல் இது. 2010ல் நூலை வாசித்த உத்வேகத்தில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்த மொழிபெயர்ப்பு. அவனது மரணத்தை நெருங்க நெருங்க தப்பி ஓட நினைத்தேன். அவன் இறக்கும் […]
ஏற்காடு இலக்கிய முகாம் 2013.
ஏற்காடு இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததுமே காயத்ரி தான் ’போயேன் பா’ என்றாள். சபலம் சபலம் :)… பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காயத்ரி தான் முன்னின்று செய்தாள். நோகாமல் நோன்பிருக்கும் கலையில் தேர்ச்சி பெறுவதையே மணவாழ்வென்று உணரும் தருணங்கள் தொடர்ச்சியாக வாய்க்கின்றன. நல்லூழ்.. வேறென்ன சொல்ல… 😉 பயண நாளுக்கு முந்தைய மாலை தான் விடுப்பை உறுதி செய்தார்கள் அலுவலகத்தில். நகம் கடிக்க வைப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என் மேலாளருக்கு. இது நான் […]
ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்
ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ் சதுக்கத்தின் நடுவே ஒரு மனிதன் மண்டியிட்டான் — நிற்கவும் வலுவின்றி களைத்துவிட்டானா? – அலைகழிக்கப்பட்ட வாழ்க்கை மோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா? – துக்கமெனும் சுத்தியினாலும் வலியெனும் சுழற்காற்றினாலும் தாக்கப்பட்டானா? – தாங்கொணா பாரமாகிவிட்டதா? – விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது மரணத்தின் தூதுவனா? – சாத்தானா அல்லது கடவுளா? திடீரென சதுக்கத்தின் மத்தியில் ஒரு மனிதன் மண்டியிட்டான் கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென ஆங்கில மூலம் […]
நம்ம தேவதேவனுக்கு விருது. வந்துருங்க மக்களே…
இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் Game of Thronesநாவலில் வரும் ஒரு மன்னர் எட்டார்ட் ஸ்டார்க் (Eddard Stark). நாவலின் துவக்கத்தில் ராணுவத்தை விட்டு ஓடிய ஒருவனுக்கு அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை அளிக்கிறார். அவனது தலையை துண்டிக்கும் செயலை மன்னரே செய்கிறார். முடித்துவிட்டு மாளிகைக்கு திரும்பும் பொழுது அவரது பத்து வயது மகனுக்கு தன் செயலுக்கான காரணத்தை அவர் விளக்கும் வரி ஏதோ செய்தது வாசிக்கும் பொழுது : ”நீ ஒரு மனிதனின் உயிரை பறிக்க முடிவெடுக்கிறாயெனில் அவனை கண்ணோடு […]