பிரிவுகள்
கவிதை பொது

அசாயலை அடைந்த பிள்ளையார் ;)

pillaiyaar

இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன்  முகம் செய்தேன்
முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்றார்கள்
இந்த முறை
உறவின் அடையாளங்களில் இருந்து
கழன்று ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அசாயலை
அடைவதற்கு
ஆகிவிட்டது இத்தனை காலம்.

– கல்யாண்ஜி

(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. 🙂  அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். 😉  )

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

10 replies on “அசாயலை அடைந்த பிள்ளையார் ;)”

பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாரே நல்ல அம்சமா வந்திருக்காரு ! 🙂

பட் பயப்படாம எலி புடிக்க போனது, ரொம்ப தைரியம்தான் யக்கோவ் :))

\\ அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். )\\

பிள்ளையாருக்கு இணையாக எலியை உருவாக்கிய அம்மணிக்கு ஒரு ஸ்பெசல் ஒ ;))

கவிதையும் அருமை 😉

நெசமாவே பிள்ளையார் போல செய்திருக்கும் காயத்ரிக்கு வாழ்த்துகள். எலி? கொஞ்சம் நவீன, கணினி எலி போல இருந்தாலும்… கவிதாயினி இல்லையா? கொஞ்சம் பூடகமாகவும் சொல்லணும்ல!

அனுஜன்யா

//பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. //

ஆச்சர்யம்.. அதிசயம்.. ஆனால் உன்மை :)))))

//அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், //

அவ்வ்வ்வ்வ்வ்.. நான் பிள்ளையாருக்கு வால் வைக்க முயற்சி செஞ்சிருக்காளோனு இல்ல தப்பா நினைச்சிட்டேன் ;)))))

ஏம்ப்பா… அது எலியா இல்ல குட்டி டைனோசரா ? அவ்வளவு பெரிய வாலு… ஒருவேலை எங்க அக்கா தன்னோட வாலை எடுத்து இங்க ஒட்ட வச்சுட்டாங்களா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s