<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>அங்கிங்கெனாதபடி</title>
	<atom:link href="http://angumingum.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://angumingum.wordpress.com</link>
	<description>அந்த சிட்டுக்குருவியை போலே...</description>
	<pubDate>Wed, 21 May 2008 12:22:16 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=MU</generator>
	<language>ta</language>
			<item>
		<title>குறுங்கதை மொழிபெயர்ப்பு</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/05/21/piece_for_the_left_hand/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/05/21/piece_for_the_left_hand/#comments</comments>
		<pubDate>Wed, 21 May 2008 12:22:16 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[அமெரிக்க இலக்கியம்]]></category>

		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=186</guid>
		<description><![CDATA[Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது &#8220;கட்டாயம் கேட்கப்படவேண்டியவை&#8221; பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது. 





ஜெ. ராபர்ட் லென்னன் (J. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது &#8220;கட்டாயம் கேட்கப்படவேண்டியவை&#8221; பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது. </p>
<div id="u5ox3">
</div>
<div><a href="http://angumingum.files.wordpress.com/2008/05/pieces-for-the-left-hand.jpg"><img class="alignnone size-full wp-image-187" src="http://angumingum.files.wordpress.com/2008/05/pieces-for-the-left-hand.jpg?w=352&h=500" alt="" width="352" height="500" /></a></div>
<div id="u5ox3">
</div>
<div>ஜெ. ராபர்ட் லென்னன் (J. Robert Lennon) ஒரு அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய  Pieces for the Left Hand என்ற புத்தகம் 100 குறுங்கதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் 1 - 2 பக்கங்களே உள்ள கதைகள். 100 கதைகளுமே ஒரே கதைசொல்லியின் பார்வையிலிருந்து விரிகின்றன என்பதனால் இதனை ஒரு வகையில் சிதறிய நாவல் என்றும் கொள்ளலாம். இந்த புத்தகம் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதிலிருந்து 8 கதைகளை சமீபத்தில் Selected Shorts நிகழ்ச்சியின் மூலம் கேட்க நேர்ந்தது. கேட்ட எட்டு கதைகளுமே கதை எனும் வடிவத்தின் அலாதித்தன்மையை கொண்டிருந்தன. இக்கதைகளின் கதைசொல்லி, நம் காதுகளின் வந்து அவர் கண்ட - கேட்ட ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார் என பட்டது எனக்கு. இக்கதைகளை கேட்கையில் நமக்கு ஏற்படுவது - 1. குறுகுறுப்பு 2. உடனடியான யாருக்கேனும் சொல்ல வேண்டும் என்ற விழைவு. இரண்டுமே இவற்றின் &#8220;புறம் சொல்லல்&#8221; அம்சத்தில் இருந்தே கிளைத்தெழுகின்றன என நினைக்கிறேன். இந்த எட்டு கதைகளின் இருந்து எனக்கு பிடித்த ஒரு கதையை மட்டும் மொழிபெயர்த்து இங்கு தந்துள்ளேன். ஒலிக்கோப்பை கேட்டு அதை மொழிபெயர்ப்பதை விட கொடுமையான விஷயம் வேறில்லை. இந்த குறுங்கதையை முடிப்பதற்குள் ஐயோ என்றாகிவிட்டது. புத்தகம் கைக்கு வந்ததும் இன்னமும் சில கதைகளை மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். இனி கதை&#8230;
</div>
<div id="u5ox3"></div>
<div id="u5ox3">*****</div>
<div id="u5ox6"></div>
<div id="u5ox8">தேசிய அளவில் அறியப்பட்ட அந்த உள்ளூர் கவிஞர் தனது புதிய தொகுப்பிற்கான கவிதைகளை எழுதிமுடித்திருந்தார். சில வலிமிகுந்த துக்ககரமான நிகழ்வுத்தொடர்ச்சிகளினால் தொகுப்பு வெளிவருவது சில வருடங்களாக தாமதமாகிக்கொண்டே இருந்தது. இறுதியாக எல்லா திருத்தங்களும் செய்து முடிக்கப்பட்டதும் கவிஞர் இதனை ஒரு இறுதி படி எடுத்தார். அதை நகல் எடுக்க நகலகம் செல்வதற்காக காரில் ஏறினார்.</div>
<div id="u5ox9"></div>
<div id="u5ox11">செல்லும் வழியில் சிகப்பு விளக்கில் நிற்காமல் சென்றதால் காவலதிகாரியால் நிறுத்தப்பட்டபோது,  கவிஞர் குடித்துவிட்டு வாகனமோட்டினார் என்று தெரியவந்தது. எங்கள் மாநிலத்தில் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இறுகிய வாகன விதிகளின் காரணமாக அவரது வாகனம் பரிமுதல் செய்யப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.</div>
<div id="u5ox12"></div>
<div id="u5ox14">தன்னிலை அடைந்ததும் கவிஞருக்கு தனது கவிதை தொகுப்பின் ஒரே படி வாகனத்திற்கு உள்ளே இருப்பது நினைவிற்கு வர, அதை தருமாறு காவல் அதிகாரிகளிடம் கோரினார். ஆனால், வாகனத்தின் உள்ளிருக்கும் எதுவுமே இனி அவருக்கு சொந்தமானதல்ல என கூறி திரும்பத்தர மறுத்துவிட, இந்த மறுப்பு நீண்டதொரு நீதிச்சமராக உருவெடுத்தது.  இதனிடையில் நமது பிரியப்பட்ட கவிஞர் இறந்துவிட்டார்.</div>
<div id="u5ox15"></div>
<div id="u5ox17">கவிஞரின் வெளியீட்டாளர்களுக்கு இந்த சமயத்தில் கவிஞரின் தொகுப்பு வெளிவந்தால் நல்லது என தோன்ற, அவர்கள் காவல்துறையுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதாகப்பட்டது, காவல் நிலையத்தில் உள்ள யாரேனும் படியில் உள்ளதை தொலைபேசியின் மூலம் படித்தால் அதை பதிப்பகத்தில் ஒருவர் எழுதிக்கொண்டுவிடுவார். படி கைமாறாமல், உள்ளடக்கம் மட்டும் இதன் மூலம் கைமாறி விடும். சொல்லப்போனால், படி காவல்துறைக்கு சொந்தமானதென்றாலும் அதன் உள்ளடக்கம் வாகனத்திற்கு வெளியே தான் உருவானது என்பதால், அது அவர்களுக்கு சொந்தம் அல்ல, அல்லவா? காவல்துறை இதற்கு சம்மதித்ததும், தொலைபேசியில் வாசிப்பு நிகழ, விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களுடன் புத்தகம் வெளிவந்து, கவிஞர் தன் வாழ்நாளில் அனுபவிக்காத இலக்கிய அந்தஸ்தை அவருக்கு பெற்றுத்தந்தது.</div>
<div id="u5ox18"></div>
<div id="u5ox20">காவல்துறைக்கும் கவிஞரின் குடும்பத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வழக்கில் கவிஞருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதும், கவிதைகளின் அசலான படி திரும்பத்தரப்பட்டது. இதற்கும் நூல் வடிவிற்கும் சம்மந்தமே இல்லாதிருந்தது அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.</div>
<div id="u5ox21"></div>
<div id="u5ox23">உண்மை வெளிவர வெகுநாட்கள் பிடிக்கவில்லை. கவிதை வாசிப்பின் போது சில திருத்தங்களை செய்ததாக ஒரு காவல் அதிகாரி ஒத்துக்கொண்டார். இதற்கான காரணமாக அவர் கூறியது : கவிதைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிறைய இருந்தன; அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருத்தங்கள் செய்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த காவலதிகாரி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மிகுந்த பாராட்டினை பெற்ற அந்த புத்தகமும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது. உண்மையான தொகுப்பு வெளியாகி, மோசமான விமர்சனத்திற்கு ஆளானது.</div>
<div id="u5ox24"></div>
<div id="u5ox26">அந்த காவலதிகாரி தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். கவிதைகள் மிக அருமையாக உள்ளதாக பலரும் ஒத்துக்கொண்டாலும், நேர்மையற்றவராய் அறியப்பட்ட ஒருவரது படைப்புக்களை வெளியிட பதிப்பகங்கள் தயங்குகின்றன.</div>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/186/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/186/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/186/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/186/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/186/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/186/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/186/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/186/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/186/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/186/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/186/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/186/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=186&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/05/21/piece_for_the_left_hand/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2008/05/pieces-for-the-left-hand.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>சொல் விரிவு - இரு புறநானூற்றுப் பாடல்கள்</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/#comments</comments>
		<pubDate>Mon, 14 Apr 2008 05:29:42 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[பழந்தமிழ் இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=185</guid>
		<description><![CDATA[

விதிர்²-த்தல்  [ vitir²-ttal ] 11 v vitir. [T. Tu. vedaru, K. bidiru.] intr.&#8211;1. To tremble, quiver; நடுங்கு தல்.  2. To be afraid; அஞ்சுதல். (W.)&#8211;tr. 1. To scatter, throw about; சிதறுதல்.


சொல் என்பதோர் ஒலி வடிவம். சொற்களால் ஆனதல்ல மொழி. சொல் எவற்றின் ஒலியாகிறதோ அவற்றால் ஆனது மொழி. இரு சற்றே மாறுபட்ட பொருட்கள் ஒரே சொல்லை குறிப்பானாய் கொண்டிருப்பதும், இடம் பொறுத்து அர்த்தம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div></div>
<blockquote>
<div>விதிர்²-த்தல்  [ vitir²-ttal ] 11 v vitir. [T. Tu. vedaru, K. bidiru.] intr.&#8211;1. To tremble, quiver; நடுங்கு தல்.  2. To be afraid; அஞ்சுதல். (W.)&#8211;tr. 1. To scatter, throw about; சிதறுதல்.</div>
<div></div>
</blockquote>
<div>சொல் என்பதோர் ஒலி வடிவம். சொற்களால் ஆனதல்ல மொழி. சொல் எவற்றின் ஒலியாகிறதோ அவற்றால் ஆனது மொழி. இரு சற்றே மாறுபட்ட பொருட்கள் ஒரே சொல்லை குறிப்பானாய் கொண்டிருப்பதும், இடம் பொறுத்து அர்த்தம் கொள்ளப்படுவதும் வழக்கம் தான்.</div>
<div></div>
<div>புறநானூற்று கவிதைகள் இரண்டு. இரண்டிலும் விதிர்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அச்சொல்லினைக்கொண்டு உருவாக்கப்படும் களங்களுக்கிடையே எத்தனை தொலைவு&#8230;</div>
<div>
</div>
<div>
</div>
<div></div>
<div></div>
<blockquote>
<div>விதிர்த்தல் -  To scatter, throw about; சிதறுதல்.</div>
</blockquote>
<div>
</div>
<div></div>
<div>188. மக்களை இல்லோர்!</div>
<blockquote>
<div></div>
<div>படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்</div>
<div>உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்</div>
<div>குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,</div>
<div>இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்</div>
<div>நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,</div>
<div>மயக்குறு மக்களை இல்லோர்க்குப்</div>
<div>பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.</div>
<div>
</div>
<div></div>
<div>- பாண்டியன் அறிவுடை நம்பி</div>
<div></div>
</blockquote>
<div>பல உணவுகளை படைத்து பலரோடு உண்ணும்</div>
<div>எல்லாம் பெற்ற செல்வர் ஆயினும், இடை பட</div>
<div>குறுகுறுவென நடந்து, சிறு கை நீட்டி</div>
<div>இட்டும் தொட்டும் கவ்வியும் குழப்பியும்</div>
<div>நெய் சேர்ந்த சாதத்தை உடலெல்லாம் உதிர்த்தும்</div>
<div>மயக்கும் மக்களை இல்லாதவர்க்கு</div>
<div>பயனேதும் இல்லை தாம் வாழும் நாளே</div>
<div></div>
<div>&#8212;&#8212;-</div>
<div>
</div>
<div></div>
<blockquote>
<div>விதிர்ப்பு - Trembling, shivering, shaking from fear; நடுக்கம்.</div>
</blockquote>
<div>
</div>
<div></div>
<div>255. முன்கை பற்றி நடத்தி!</div>
<div>
</div>
<div></div>
<div>காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அப்பெண். செல்லும் வழியில் ஓர் கானகத்தில் காதலன் உயிர் துறக்கிறான். வெயிலில் கிடக்கும் அவனது உடலை பார்த்தபடி பாடுகிறாள்&#8230;</div>
<div></div>
<blockquote>
<div>ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;</div>
<div>அணைத்தனன்&#8217; கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!</div>
<div>என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை</div>
<div>இன்னாது உற்ற அறனில் கூற்றே!</div>
<div>திரைவளை முன்கை பற்றி-</div>
<div>வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!</div>
<div></div>
<div>- வன்பரணர்</div>
<div></div>
</blockquote>
<div>ஐயோ எனில் புலி வருமோ என அஞ்சுகிறேன்</div>
<div>அனைத்தெடுக்க முயன்றேன், விரிந்த மார்பை எடுக்க முடியவில்லை</div>
<div>என் போல் பெரும் நடுக்கமுறுக உன்னை</div>
<div>கொன்ற அறமில்லாத விதி!</div>
<div>வளையிட்ட என் கைபற்றி</div>
<div>நிழலுக்கு போகலாம்</div>
<div>நடந்துவாயேன் சிறிது</div>
<div>
</div>
<div></div>
<div></div>
<div>நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்ப்பது தரும் உணர்விற்கும் என் போல் பெருவிதிர்ப்புறுக என்று கூற்றுவனுக்கு இடப்படும் சாபத்திற்கும் உணர்வு ரீதியில் சில ஒளியாண்டுகள் தூரம் இருக்கும். ஆனால் அவ்விரிவை விதிர்ப்பு எனும் சொல் கடக்கிறது இங்கு அனாயாசமாய்.</div>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/185/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/185/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/185/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/185/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/185/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/185/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/185/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/185/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/185/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/185/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/185/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/185/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=185&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>விடியற்பொழுதின் தோழமை - குல்சார் மொழிபெயர்ப்பு</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/04/11/gulzar_translated/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/04/11/gulzar_translated/#comments</comments>
		<pubDate>Fri, 11 Apr 2008 10:52:03 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=184</guid>
		<description><![CDATA[இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில். எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும் செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில் சிக்கியவை குல்சாரின்  மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு.  அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி&#8230;
குல்சார் கவிதைகள்
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;
அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
தோட்டத்தில், சில பொழுதுகளில்&#8230;.
புளியமரம்
காற்றினில் அசைகையில்,
கல் சுவர்களின் மேல்
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்
உறிஞ்சப்படுகின்றன,
காய்ந்த நிலத்தின் மேல்
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில். எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும் செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில் சிக்கியவை குல்சாரின்  மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு.  அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி&#8230;</p>
<p><strong>குல்சார் கவிதைகள்</strong><br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<p>அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்<br />
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?<br />
தோட்டத்தில், சில பொழுதுகளில்&#8230;.<br />
புளியமரம்<br />
காற்றினில் அசைகையில்,<br />
கல் சுவர்களின் மேல்<br />
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்<br />
உறிஞ்சப்படுகின்றன,<br />
காய்ந்த நிலத்தின் மேல்<br />
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் போல.<br />
தோட்டத்தில், ஞாயிறொளி நிதானமாக விம்முகிறது.</p>
<p>மூடிய அறைகளில்&#8230;<br />
விளக்கொளி துடிக்கையில்,<br />
பரந்த நிழலொன்று எனை உண்ணத்துவங்குகிறது, ஒவ்வொரு கவளமாய்.<br />
தூரத்திருந்து<br />
கண்கள் எனையே பார்த்தபடி உள்ளன.<br />
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?<br />
நாளின் அனேக சமயங்களில் எண்ணத்தில் இருக்கிறாய்.</p>
<p>ஆங்கில மூலம் : <a title="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11126" href="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11126" target="_blank">http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11126</a></p>
<p>***</p>
<p>வருக<br />
&#8212;&#8212;&#8211;<br />
திடீரென<br />
கோவமாய் அறையுள் நுழைந்த காற்று<br />
புயலொன்றை கட்டவிழ்த்து விட்டது<br />
திரைச்சீலைகள் படபடத்தன<br />
மேஜை மேல் கண்ணாடிக்கோப்பைகள் பரத்தப்பட்டன<br />
பக்கங்கள் விதிர்விதிர்க்க, ஒரு புத்தகம் அவசரமாய் தன் முகம் மூடியது<br />
மைபுட்டி பாய்ந்து<br />
வெற்றுத்தாள்களில் வண்ணத்தோரணங்களிட்டது<br />
சுவற்றுச்சித்திரங்கள் ஆச்சரியத்தில்<br />
உனை காணவென எம்பிப் பார்த்தன</p>
<p>மீண்டும் இப்படி<br />
வா</p>
<p>என் அறையை<br />
மூழ்கடி</p>
<p>ஆங்கில மூலம் : <a title="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11115" href="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11115" target="_blank">http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11115</a></p>
<p>****</p>
<p>மன்னித்துவிடு, சோனா<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>மன்னித்துவிடு, சோனா.<br />
இம்மழையினில்<br />
என் வரிகளின் நிலப்பரப்பினூடே<br />
பயணிப்பது<br />
உனக்கு அசௌகர்யமாய் இருக்கலாம்.<br />
இங்கு பருவம் பாராது பெய்யும் மழை.<br />
என் கவிதைகளின் குறுக்குச்சந்துகள் பெரும்பாலும் ஈரமாகவேயுள்ளன.<br />
குழிகளில் அனேகம் சமயங்களில் நீர் சேர்ந்து கிடக்கிறது.<br />
இங்கு தடுக்கி விழுந்தால்<br />
உன் கால் சுளுக்கிக்கொள்ளலாம், ஜாக்கிரதை.</p>
<p>மன்னித்துவிடு. எனினும்&#8230;.<br />
உன் அசௌகர்யத்திற்கு காரணம்<br />
என் வரிகளில் வெளிச்சம் சற்று மங்கலாக இருப்பது தான்.<br />
நீ கடக்கையில்<br />
புலப்படாது கிடக்கின்றன<br />
வாயிற்படியின் கற்கள்<br />
நான் அடிக்கடி இடித்து கால்நகம் பெயர்த்துக்கொள்வேன் இதில்<br />
குறுக்குச்சாலையில் நிற்கும் தெருவிளக்கு<br />
யுகங்களாய், எறியாமல் நிற்கிறது.<br />
நீ அசௌகர்யப்பட்டுள்ளாய்.<br />
மன்னித்துவிடு.  இதயத்திலிருந்து கேட்கிறேன், மன்னித்துவிடு.</p>
<p>ஆங்கில மூலம் : <a title="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11112" href="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11112" target="_blank">http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11112</a></p>
<p>தமிழில் : சித்தார்த். வெ</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/184/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/184/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/184/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=184&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/04/11/gulzar_translated/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மோரியோடான செவ்வாய் கிழமைகள் - 4</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/04/10/morrie_4/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/04/10/morrie_4/#comments</comments>
		<pubDate>Thu, 10 Apr 2008 14:49:08 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<category><![CDATA[மோரியுடன் செவ்வாய்க]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=183</guid>
		<description><![CDATA[ஒளியும் ஒலியும்

1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார்  மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள  பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது&#8230; 
இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருந்தார். சாப்பிடும்போது இருமல் வரத்தொடங்கியது. மெல்லுவது பெரும் பணியென்றானது. அவரது கால்கள் இறந்துவிட்டிருந்தன. இனி ஒருபோதும் அவரால் நடக்கவியலாது. 
இருந்தும், மோரி சோர்வடைய மறுத்தார். பதிலாக, புதுப்புது எண்ணங்களின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span>ஒளியும் ஒலியும்</span></p>
<p></p>
<p><span>1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். </span><span>ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார் </span><span> மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள  பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது&#8230; </span></p>
<p><span>இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருந்தார். சாப்பிடும்போது இருமல் வரத்தொடங்கியது. மெல்லுவது பெரும் பணியென்றானது. அவரது கால்கள் இறந்துவிட்டிருந்தன. இனி ஒருபோதும் அவரால் நடக்கவியலாது. </span></p>
<p><span>இருந்தும், மோரி சோர்வடைய மறுத்தார். பதிலாக, புதுப்புது எண்ணங்களின் ஊற்றக்கண்ணாக மாறினார். தனக்கு தோன்றிய எண்ணங்களையெல்லாம் குறிப்பேடுகள், அஞ்சலுறைகள், துண்டு காகிதங்கள் என கிடைத்த இடமெல்லாம் எழுதினார். மரணத்தின் நிழலில் வாழ்வதைக் குறித்த சின்னச்சின்ன தத்துவங்கள் எழுதினார் : “உன்னால் எதை செய்யமுடியும் எதை செய்ய முடியாது என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள்.” , “கடந்தகாலத்தை கடந்தகாலமாகவே ஏற்றுக்கொள், மறுக்கவோ மாற்றவோ முயற்சிக்காதே”, “உன்னையும் மற்றவர்களையும் மன்னிக்கக் கற்றுக்கொள்”, “காலம் கடந்துவிட்டது, இனி எப்படி அப்பிரச்சனையுள் தலையிட என நீயாக எண்ணிக்கொள்ளாதே”.</span></p>
<p><span>விரைவிலேயே இது போன்ற 50 “தனிமொழிகள்” சேர, இவற்றை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். இச்சொற்றொடர்களால் மிகவும் கவரப்பட்ட மௌரி ஸ்டேய்ன் என்ற மோரியுடன் பணிபுரிந்த நண்பர், இவற்றை தொகுத்து பாஸ்டன் க்ளோப் இதழின் நிருபருக்கு அனுப்ப, அவர் இதை கொண்டு ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையின் தலைப்பு : </span></p>
<p></p>
<p style="text-align:center;"><span><strong>ஒரு பேராசிரியரின் கடைசி பாடம் : தன் மரணம்</strong></span></p>
<p></p>
<p><span>இந்த கட்டுரை “நைட்லைன்” நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒருவரின் கண்ணில் பட, அவர் இதை வாஷிங்டன்னில் இருந்த டெட் கோப்பலின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</span></p>
<p><span>“இத படிச்சு பாரேன்” என்றார் தயாரிப்பாளர். </span></p>
<p><span>விளைவு&#8230; இதோ, மோரியின் வீட்டினை ஒளிப்பதிவாளர்கள் சூழ்ந்திருக்க, டெட் கோப்பலின் கார் வாயிலை அடைகிறது.</span></p>
<p><span>கோப்பலைக் காண மோரியின் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வீட்டில் குழுமியிருந்தனர்.  கோப்பல் உள்ளே நுழைந்ததும் அங்கு படர்ந்த பரவசம் அனைவரையும் தொற்றிக்கொண்டது, மோரியைத் தவிர. சக்கர நாற்காலியில் மெல்ல முன்னே வந்து புருவம் உயர்த்தி, உரத்த, பாடுவதைப் போன்ற குரலில், </span></p>
<p><span>“டெட், பேட்டிக்கு ஒத்துக்கறத்துக்கு முன்ன உங்கள கொஞ்சம் சோதிச்சுப் பாக்கனுமே நானு” என்றார் மோரி.  </span></p>
<p><span>அங்கு பரவிய சங்கடமான மௌனத்தினூடே அவ்விருவரும் அறைக்குள் சென்றனர். கதவு சாத்தப்பட்டது. “டெட் மோரிய ரொம்ப படுத்தாம விட்டுடுவாரா?” என்றார் ஒருவர். “அட போப்பா&#8230; மோரி டெட்ட ரொம்ப கஷ்டப்படுத்தாம விடனுமேன்னு நான் கவலைப்படறேன்” என்றார் மற்றொருவர். </span></p>
<p><span>உள்ளே, டெட்டை அமர்ந்துகொள்ளுமாறு சைகைகாட்டினார் மோரி. கைகளை மடியில் கட்டிக்கொண்டு புன்னகையுடன்,</span></p>
<p><span>“உங்க மனசுக்கு பக்கத்துல இருக்கற எதையாவது பத்தி பேசுங்க”, என்றார். </span></p>
<p><span>“மனசுக்கு?” </span></p>
<p><span>கோப்பல் அந்த முதியவரை கூர்ந்து நோக்கினார். “ம்ம். சரி” என்று தனது குழந்தைகளைக் குறித்து பேசத்துவங்கினார். குழந்தைகள் மனதிற்கு அருகிலிருப்பவர்கள் தான் அல்லவா?</span></p>
<p><span>“ம்ம். நல்லது,. உங்க நம்பிக்கைகள பத்தி ஏதாவது சொல்லுங்க” என்றார் மோரி. </span></p>
<p><span>டெட் நெளிந்தார். “சந்திச்சு கொஞ்ச நேரமே ஆனவர் கிட்ட இதப்பத்தி எல்லாம் எப்படி பேச?”</span></p>
<p><span>“டெட், நான் செத்துக்கிட்டு இருக்கேன். என் கிட்ட நேரம் அதிகம் கிடையாது”</span></p>
<p><span>டெட் சிரித்துவிட்டார். சரி, நம்பிக்கை&#8230;. தனக்கு மிகவும் பிடித்த மார்க்கஸ் ஔரிலியஸின் வாக்கியம் ஒன்றை கூறிவிட்டு,</span></p>
<p><span>“நான் ஒன்னு கேக்கறேன். என் நிகழ்ச்சிய பாத்திருக்கீங்களா நீங்க?” என்றார் டெட்.</span></p>
<p><span>“ம்ம். பாத்திருக்கேன். ரெண்டுமுறைன்னு நினைக்கறேன்.”</span></p>
<p><span>“ரெண்டுமுறையா? அவ்வளவு தானா?”</span></p>
<p><span>“ரொம்ப கவலைப்படாதீங்க. ஓஃப்ரா வ ஒரு முறை தான் பாத்திருக்கேன்.” </span></p>
<p><span>“ரெண்டுமுறை பாத்திருக்கீங்களே&#8230; என்ன நினைக்கறீங்க நிகழ்ச்சிய பத்தி?”</span></p>
<p><span>மோரி இடைவெளி விட்டு, “உண்மைய சொல்லவா?” என்றார்.</span></p>
<p><span>“ம்ம்”</span></p>
<p><span>“நீங்க ஒரு தன்மோகியா தான்  (narcissist)  பட்டீங்க எனக்கு”</span></p>
<p><span>“தன்மோகியா இருக்க முடியாத அளவுக்கு அசிங்கமானவன் மோரி நானு” என்றார் டெட் சிரித்துக்கொண்டே. </span></p>
<p> </p>
<p><span>கோப்பல் கச்சிதமான நீல நிற சூட்டும், மோரி தொள தொளவென்றிருந்த சாம்பல் நிற ஸ்வெட்டரும் அணிந்திருக்க, வரவேற்பறையில் ஒளிப்பதிவு துவங்கியது. ஆடம்பர உடைகளோ ஒப்பனையோ வேண்டாமென மறுத்துவிட்டார் மோரி. மரணம் வெட்கப்படவேண்டிய விடயம் அல்ல என்பது அவர் சித்தாந்தம். இப்போது போய் அவர் மூக்கிற்கு பௌடர் அடித்துக்கொள்ளப்போவதில்லை. </span></p>
<p><span>சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததனால் அவரது தளர்ந்த கால்கள் ஒளிப்பதிவின் போது மறைந்தே இருந்தன. வாழ்வின் அந்தியை எதிர்கொள்வதைப் பற்றி பேசுகையில் - கைகள் இன்னும் வலுவிழக்காததால் - இரு கரங்களையும் ஆட்டி ஆட்டி பேசினார் மோரி, பெரும் உற்சாகத்துடன். </span></p>
<p><span>“டெட், இதெல்லாம் தொடங்கினப்ப என்னையே நான் கேட்டுக்கிட்டேன். எல்லாரையும் போல நானும் உலகியல்ல இருந்து விலகி இருக்க போறனா, இல்ல வாழனும்னு முடிவெடுக்கப்போறனான்னு. வாழனும். கன்னியமா, தைரியமா, புன்னகையோட, நிதானமா வாழனும். அல்லது அதற்கான முயற்சியாவது எடுக்கனும்னு முடிவு செஞ்சேன்.”</span></p>
<p><span>“சில விடியல்கள் கழிவிரக்கம் பொங்க, அழுகையோட தான் விடுயுது. சில விடியல்கள் கோபமும் கசப்புமா. ஆனா ரொம்ப நேரம் நீடிக்காது இதெல்லாம். எழுந்து எனக்கு நானே சொல்லிப்பேன். நான் வாழனும்&#8230; வாழனும்&#8230;..”</span></p>
<p><span>“இது வரைக்கும் என்னால முடிஞ்சிருக்கு இத செய்ய. இனிமேலும் தொடர்ந்து இருக்க முடியுமா இப்படி? நிச்சயமா சொல்லத் தெரியல. என் மேலையே நான் பந்தயம் கட்டறேன்,  என்னால முடியும்னு”.</span></p>
<p><span>கோப்பல் மோரியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். மரணம் தரும் பணிவு குறித்து கேட்டார்.</span></p>
<p><span>“அதாவது, ஃப்ரெட்” என்ற மோரி, தன் தவறை உணர்ந்து “இல்ல, இல்ல, டெட்&#8230;” என கூற,</span></p>
<p><span>“இது உண்மையாவே பணிவ தர்ர விஷயம் தான்” என்றார் டெட், சிரித்துக்கொண்டே.</span></p>
<p><span>நோய்க்குப்பின்னான வாழ்வினைக்குறித்து இருவரும் பேசினர். மோரி மற்றவர்களை அதிகம்  சார்ந்திருப்பதைப் பற்றி பேசினார். உண்ண, அமர, அங்கும் இங்கும் செல்ல என  இப்பொழுதே எல்லாவற்றிற்கும் அவர் மற்றவர்களை தான் நம்பியிருந்தார். இந்த மெல்ல நிகழும் உதிர்தலில் எதை நினைத்து மிகவும் அஞ்சுகிறீர்கள் என மோரியை கேட்டார் டெட்.</span></p>
<p><span>மோரி சற்று அமைதியாகி&#8230; அந்த விடயத்தை தொலைக்காட்சியில் கூறலாமா என வினவினார்.</span></p>
<p><span>ம்ம் என்றார் டெட்.</span></p>
<p><span>அமெரிக்காவின் புகழ்பெற்ற பேட்டியாளரை கண்ணோடு கண் நோக்கி மோரி கூறினார், “டெட். இன்னும் சில நாட்கள்ல எனக்கு கால் கழுவிவிட யாராவது வேணும்.”</span></p>
<p><span>நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. டெட் கோப்பல் அதிகாரம் தெறிக்கும் குரலில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். </span></p>
<p><span>“மோரி ஷ்வார்ட்ஸ் யார்? இவ்விரவின் முடிவிற்குள் உங்களில் பலரும் அவர் மேல் ஏன் அக்கரை கொள்ளப்போகிறீர்கள்?”</span></p>
<p><span>ஆயிரம் மைல்களுக்கு அப்பால், குன்றில் மேல் அமைந்த என் வீட்டில் சாவகாசமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த வாக்கியம் எனை தாக்கியது. “மோரி ஷ்வார்ட்ஸ் யார்?”. உரைந்து போனேன். </span></p>
<blockquote>
<p><span>நாங்கள் இருவரும் இணைந்த முதல் வகுப்பு அது. 1976ஆம் ஆண்டின் வசந்த காலம். மோரியின் பெரிய அலுவலக அறையுள் நுழைந்ததும் சுவற்றை நிறைத்து நின்ற எண்ணற்ற புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்தன. சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், உளவியல் என வகைவகையாய் புத்தகங்கள். மரத்தாலான தரையின் மீது பெரிய கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. வளாகத்தின் நடைபாதையை பார்த்தபடி ஒரு ஜன்னல். கைகளில் புத்தகமும் அட்டவணையுமாய் பத்து பன்னிரண்டு மாணவர்கள் தான் நின்றிருந்தனர் அங்கு. பெரும்பாலானோர் ஜீன்ஸும், சாதாரண ஷூக்களும், அரைக்கைச்சட்டையும் அனிந்திருந்தனர். இத்தனை சிறிய வகுப்பில் இருந்து தப்பித்து வெளியேறுவது கடினம் என கருதி, திரும்பிவிடலாமா என யோசிக்கையில்,</span></p>
<p><span>“மிட்சேல்?” என பதிவேட்டில் இருந்த பெயரைப் படித்தார் மோரி. நான் கை தூக்கினேன். </span></p>
<p><span>“மிட்ச் ன்னு  கூப்பிடவா, இல்ல மிட்சேல்னு தான் கூப்பிடனுமா?”</span></p>
<p><span>இதுவரை எந்த ஆசிரியரும் இப்படி வினவியதில்லை. ஒருமுறை அவரை மேலும் கீழும் பார்த்தேன். மஞ்சள் சட்டை, பச்சை கால்ச்சட்டை. நெற்றியை மறைத்த வெள்ளி நிற முடி. அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார். </span></p>
<p><span>மிட்ச், என்றேன் நான். “நண்பர்கள் என்ன அப்படி தான் கூப்பிடுவாங்க”</span></p>
<p><span>“ம்ம். அப்ப மிட்ச் தான்”, என்றார் மோரி. “அப்பறம், மிட்ச்?”</span></p>
<p><span>ம்ம்?</span></p>
<p><span>“ஒரு நாள் என்னையும் உன்னோட நண்பனா நினைப்பன்னு எதிர்பாக்கறேன்”</span></p>
</blockquote>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/183/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/183/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/183/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/183/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/183/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/183/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/183/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/183/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/183/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/183/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/183/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/183/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=183&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/04/10/morrie_4/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மோரியோடான செவ்வாக்கிழமைகள் - 3</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/04/07/morrie_3/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/04/07/morrie_3/#comments</comments>
		<pubDate>Mon, 07 Apr 2008 05:57:26 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<category><![CDATA[மோரியுடன் செவ்வாய்க]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=182</guid>
		<description><![CDATA[மாணவன்
அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும்.
நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.
உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த வருடங்கள், கல்லூரியை விட்டு நியூ யார்க் சென்று, திறமைகளை உலகிற்கு அர்ப்பணிக்க துடிக்கும், திக்கிப்பேசும் பட்டதாரியிலிருந்து என்னை வெகுவாய் மாற்றி இருந்தன.
உலகம், அவ்வளவு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>மாணவன்</strong></p>
<p>அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும்.</p>
<p>நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.</p>
<p>உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த வருடங்கள், கல்லூரியை விட்டு நியூ யார்க் சென்று, திறமைகளை உலகிற்கு அர்ப்பணிக்க துடிக்கும், திக்கிப்பேசும் பட்டதாரியிலிருந்து என்னை வெகுவாய் மாற்றி இருந்தன.</p>
<p>உலகம், அவ்வளவு ஒன்றும் சுவாரஸ்யமானது அல்ல என்பதனை கண்டறிந்தேன். எனது இருபதுகளின் முற்பகுதியை வாடகை கொடுத்தபடியும், விளம்பரங்களை படித்தபடியும், இந்த விளக்கு எனக்கு மட்டும் ஏன் பச்சையாக மாற மறுக்கிறது என எண்ணியபடியும் கழித்தேன். புகழ்பெற்ற இசைக்கலைஞனாவதே என் கனவாக இருந்தது (நான் பியானோ வாசித்தேன்).<br />
இருண்ட, காலியான இரவுவிடுதிகள், முறிந்த வாக்குறுதிகள், உடைந்த இசைக்குழுக்கள், என்னைத்தவிர மற்ற அனைவரிடமும் ஆர்வம் காட்டிய தயாரிப்பாளர்கள் என கழிந்த வருடங்கள் என் கனவுகளை புளிப்பேறச்செய்தன. முதன் முறையாய் என் வாழ்வில் நான் தோற்கிறேன்.</p>
<p>இதே காலகட்டத்தில் தான் மரணத்துடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது.</p>
<p>எனக்கு இசையை கற்றுத்தந்த, வாகனமோட்டக் கற்றுத்தந்த, என் தோழிகள் குறித்து பகடி செய்த, என்னுடன் கால்பந்து விளையாடிய, &#8216;நான் வளர்ந்ததும் இவரைப்போல ஆகவேண்டும்&#8217; என் எண்ண வைத்த என் மாமா (அம்மாவின் தம்பி) கணைய புற்றுநோயால் தனது நாற்பத்து நான்காம் வயதில் இறந்தார். சற்றே குள்ளமானவர். தடித்த மீசை வைத்த அழகன். அவரது வாழ்வின் கடைசி ஆண்டினை அவருடன் தான் கழித்தேன், அவரது வீட்டிற்கு ஓர் அடுக்கு கீழே.  அவரது உறுதியான உடல் இளகி, பின் ஊதியது. ஒவ்வொரு இரவும் உணவு மேஜையில் வயிற்றை பிடித்துக்கொண்டு குனிந்து கண்களை இறுக மூடி வலியில் உதடுகள் துடிக்க &#8220;ஆஆ&#8230; கடவுளே&#8221;, &#8220;ஐயோ&#8230; ஏசுவே&#8221; என முனகியதை நாங்கள் - அத்தை, இரு மகன்கள், நான் - தட்டுகளை துடைத்துக்கொண்டு, ஒருவர் கண்களை ஒருவர் தவிர்த்தபடி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.</p>
<p>இயலாமையை மிக உக்கிரமாக உணர்ந்த காலம் அது. காற்று இளம்சூடுடன் வீசிய மே மாத இரவொன்றில், மாமாவும் நானும் வீட்டின் முகப்பில் அமர்ந்திருந்தோம். தொலைவானத்தை பார்த்துக்கொண்டிருந்த மாமா,அடுத்த வருடம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை காண தான் இருக்கப்போவதில்லை என்றார் பற்களை கடித்தபடி. &#8220;நீ அவங்கள பாத்துப்பியா?&#8221; என்றபோது, இப்படி எல்லாம் பேசவேண்டாம் என்றேன். சோகமாக என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.</p>
<p>அடுத்த சில வாரங்களில் அவர் இறந்தார்.</p>
<p>அந்த மரணத்திற்கு பிறகு என் வாழ்வே மாறியது. காலம் சிந்திக்கொண்டிருக்கும் நீரினைப் போல தெரிந்தது. இன்னும் வேகமாக ஓட வேண்டும். பாதி காலியான இரவு விடுதிகளில் இசைப்பது இனி இல்லை. என் அறையில் அமர்ந்து யாருமே கேட்கப்போகாத பாடல்களை எழுதுவது இனி இல்லை. மீண்டும் கல்லூரிக்கு சென்றேன். இதழியலில் முதுகலை பட்டம் பெற்று, விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக கிடைத்த முதல் வேலையில் சேர்ந்தேன். எனது புகழை நானே தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய புகழைத் தேடி ஓடுவதை குறித்து செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் எழுதினேன். காலம் நேரம் தெரியாமல் உழைத்தேன். விழித்ததும் பல் துலக்கிவிட்டு தட்டச்சத்தொடங்குவேன், இரவு அணிந்திருந்த அதே உடைகளுடன். என் மாமா ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தார். அவர் அவ்வேலையின் வழமையை வெறுத்தார் - அதே வேலை, ஒவ்வொரு நாளும். அவரைப் போல ஆகிவிடக்கூடாதென்ற உறுதியுடன் உழைத்தேன்.</p>
<p>நியூ யார்க்குக்கும் ஃப்லோரிடாவுக்குமாய் அலைந்து, இறுதியில் டெட்ராட்டில் இருந்து வெளி வரும் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் (Detroit Free Press) என்ற பத்திரிக்கையில் விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக பணிக்கு அமர்ந்தேன். டெட்ராய்ட் நகருக்கு விளையாட்டின் மீது யானைப்பசி. கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், ஹாக்கி என எல்லா விளையாட்டுக்களுக்கும் அணிகள் இருந்தன அங்கு. என் லட்சியத்திற்கு சரியான களமாக அமைந்தது அந்நகரம். சில வருடங்களிலேயே, பத்திகள் எழுதுவதோடு, விளையாட்டு புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி என என் களம் விரிவடைந்தது. இப்போது நமது நாட்டினை தொப்பலாக நனைத்திருக்கும் ஊடகப் புயலில் நானும் ஓர் அங்கமாக இருந்தேன். நான் தேவைப்பட்டேன்.</p>
<p>வாடகைகளை நிறுத்தினேன். வாங்கத்தொடங்கினேன். குன்றின் மேல் ஒரு வீடு வாங்கினேன். கார்கள் வாங்கினேன். பங்கு சந்தையின் வணிகம் செய்தேன். எப்போதுமே ஐந்தாவது கியரிலேயே ஓட்டினேன் வாழ்க்கையை. பேய் போல உடற்பயிற்சி. அபாய வேகத்தில் கார் ஓட்டம். நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவு பணம் சம்பாதித்தேன். எனது இடைவிடாத பணியினையும் பயணங்களையும் மீறி என்னை காதலித்த ஜேனைன் என்ற ஓர் கருங்கூந்தல் பெண்ணை சந்தித்தேன். ஏழு வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்த அடுத்த வாரம் பணி செய்ய ஆரம்பித்து விட்டேன். அவளுக்கு கூறினேன் - எனக்கும் தான் - நாம் ஒரு நாள் பிள்ளைகள் பெற்று குடும்பம் அமைக்கலாம் என்று. அந்த நாள் வரவே இல்லை.</p>
<p>அதற்கு பதிலாய், குறிக்கோள்களை அடைவதில் என்னை மூழ்கடித்துக்கொண்டிருந்தேன். குறிக்கோள்களை அடைவதன் மூலம் வாழ்வின் மீதான என் பிடியை இறுக்கமாக்கவியலும் என நம்பினேன். என் மாமாவைப்போல நோய்வாய்ப்பட்டு இறப்பதற்குள் (இது நிச்சயம் நடக்கும் என நம்பினேன்) மகிழ்ச்சியின் கடைசி துளி வரை உறிஞ்சி எடுத்துவிடவேண்டும் என தோன்றியது.</p>
<p>மோரி? ம்ம்.. எப்போதாவது நினைத்துக்கொள்வேன் அவரை, அவர் புகட்டிய &#8220;மனிதனாய் இரு&#8221;, &#8220;மற்றவரோடு உறவாடு&#8221; என்பதையெல்லாம். ஆனால் அவை வேறோர் வாழ்விலிருந்து வருவதைப்போல, எப்போதும் வெகு தொலைவிலேயே இருந்தன. இந்த வருடங்களிலெல்லாம், பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மடல்கள் அனைத்தையும், நன்கொடை கேட்டே எழுதி இருப்பார்கள் என்றெண்ணி படிக்காமல் எறிந்துவிடுவேன். அதனால் மோரியின் நோயினைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு சொல்லி இருக்கக்கூடிய நண்பர்களும் தொடர்பில் இல்லை.</p>
<p>இது இப்படியே இருந்திருக்கும், அன்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை துழாவிக்கொண்டிந்த போது, ஏதோ ஒன்று என் காதுகளை அடையாதிருந்திருந்தால்&#8230;.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/182/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/182/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/182/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=182&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/04/07/morrie_3/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அலகிலா சாத்தியங்களினூடே&#8230;.</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/03/09/reading-writing-kurunthogai/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/03/09/reading-writing-kurunthogai/#comments</comments>
		<pubDate>Sun, 09 Mar 2008 18:54:24 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[குறுந்தொகை]]></category>

		<category><![CDATA[பழந்தமிழ் இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=181</guid>
		<description><![CDATA[ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப்புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்துவைக்கும் செயலாகும்.
- ரோலண்ட் பார்த்தெஸ் (”ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்)
நான் வாசித்தவரை, குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஏதோவோர் நாடகத்தின் உச்சக்காட்சியின் உறைகணமாக நிற்கிறது. அக்கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவது தான் மீண்டும் மீண்டும் குறுந்தொகையில் நிகழ்கிறது. புறவயமான இச்சொற்களை சரடாகக் கொண்டு வாசக அகம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப்புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்துவைக்கும் செயலாகும்.</p>
<p>- ரோலண்ட் பார்த்தெஸ் (”ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்)</p>
<p>நான் வாசித்தவரை, குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஏதோவோர் நாடகத்தின் உச்சக்காட்சியின் உறைகணமாக நிற்கிறது. அக்கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவது தான் மீண்டும் மீண்டும் குறுந்தொகையில் நிகழ்கிறது. புறவயமான இச்சொற்களை சரடாகக் கொண்டு வாசக அகம் மேலேறி அதன் உச்சத்தை அடைகிறது. எனில் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாசல் மட்டுமே… அதனூடே நாம் செல்லும் தூரத்தை நமது அகமே தீர்மானிக்கிறது. இதை ரோலந்த் பார்தஸ் என்ற பிரென்ச் மொழியியலாளர் “வாசித்தல்-எழுதுதல்” (Reading-Writing) என்கிறார். வாசகன் வாசகன் மட்டுமல்ல. அவனளவில் அவனது வாசிப்பும் ஒருவகை “எழுதுதலே”. வாசிப்பின் அலகிலா சாத்தியங்களினூடே அவன் நிகழ்த்தும் பயணம் அது.</p>
<p>ஒரு குறுந்தொகை கவிதை. கவிதையை தனிப்பரப்பாய் கொண்டால், இது ஒரு விவரணை மட்டுமே…</p>
<p>ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து<br />
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை<br />
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த<br />
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய<br />
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.</p>
<p>-தாமோதரனார்.</p>
<p>சூரியன் அகன்ற வானத்தில்<br />
பாவம் இந்தப் பறவை<br />
நெடிந்துயர்ந்த மரக்கிளைகளில் காத்திருக்கும்<br />
பிள்ளைகளின் உள்வாய்க்கு புகட்ட<br />
இரை கொண்டு விரைகிறது</p>
<p>தலைவி கூற்றாக வரும் இக்கவிதை பிரிவின் துயரை, தலைவனின் நிலையை குறித்த வருந்தத்தை, தந்தையை எதிர்நோக்கி நிற்கும் தன் பிள்ளைகளின் ஏக்கத்தை, இப்பறவையை கண்டாவது அவன் திரும்பக்கூடாதா என்ற ஆதங்கத்தை பேசுகிறது.</p>
<p>ஆனால் இதை தலைவியின் கூற்றாக மட்டும் ஏன் காண வேண்டும்? தலைவனின் ‘தனைப் போல் பறவை” என்ற கழிவிரக்க வெளிப்பாடாக, வெறும் கையுடன் திரும்பும் அவனது ஏக்கமாக, தூரம் வந்துவிட்டவனின் பிள்ளைகள் குறித்த நினைவாக….</p>
<p>இவை ஏதுமன்றி, கவிஞனின், அந்திவேளையில் இரைகொண்டு விரையும் பறவையைக் குறித்த மென்சோகமாகவும் காணலாம் அல்லவா?</p>
<p>ஒரு படைப்பு என்பது ஒவ்வொரு வாசிப்பிலும் நீட்சி கொள்ளும் பரப்பு. படைப்பாளி படைத்து முடித்தவுடன் அது தனி உரு கொள்கிறது. இனி அதன் பயணத்தை அது தொடரும். அந்த படைப்பாளியின் மூலம் பிறந்தது அதற்கு ஒரு எதேச்சை மட்டுமே. படைப்பாளியே முக்கியமில்லை எனும் போது, உரையாசிரியர்கள் வகுத்த திணை துறை கூற்று இத்தியாதிகள் குறுந்தொகையின் கவிதை அனுபவத்தை பெற அத்தனை முக்கியமா என தெரியவில்லை. எனக்கு இவற்றின் முழு ஆழம் தெரியாததால் வரும் கூற்றாக இருக்கலாம் இது. ஆனால் குறுந்தொகையிலிருந்து நான் எதை பெற்றேனோ, அதை பெற எனக்கு இவை தேவைப்படவில்லை. இப்படி சொல்வதன் நோக்கம் மேலும் ஓர் வாசிப்பிற்கான சாத்தியத்தை கண்டடைதலேயன்றி சங்கப்பாடல்களின் மீது நிகழ்த்தப்படும் மறபார்ந்த வாசிப்பை புறம்தள்ளுதல் அல்ல.</p>
<p>காலே பரிதப் பினவே கண்ணே<br />
நோக்கி நோக்கி வாளிழந் தனவே<br />
அகலிரு விசும்பின் மீனினும்<br />
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.</p>
<p>- வெள்ளிவீதியார்</p>
<p>கால்கள் ஓய்ந்தன, கண்கள்<br />
பார்த்துப் பார்த்து வலுவிழந்தன<br />
அகண்டு இருண்ட வானத்து வின்மீன்களை விட<br />
அதிகம், இந்த உலகத்தில் பிறர்.</p>
<p>என்ற கவிதை செவிலித்தாயின் கூற்றாக வருகிறது. இக்கவிதையின் குவிமையம் “பிறர்” என்ற அந்த ஒரு சொல். கவிதையின் அத்தனை சொற்களும் சூரியகாந்தி மலர்களைப் போல, ஞாயிறெனச் சுடரும் அப்பிறரை நோக்கியே திரும்பியுள்ளன. இக்கவிதையின் எல்லை செவிலித்தாயின் “பிறருடன்” மட்டுமே முடிவடைகிறதா என்ன?</p>
<p>“கசார்களின் அகராதி” நாவலில் மிலோராட் பாவிச், அர்த்தங்கள் கொள்ளும் அலகிலா சாத்தியங்களை குறித்து இப்படி எழுதுகிறார்.</p>
<p>…yet, once I tell you what it is, it will no longer be all the things it is not.</p>
<p>- Milorad Pavic (Dictionary of Khazhars)</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/181/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/181/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/181/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/181/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/181/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/181/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/181/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/181/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/181/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/181/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/181/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/181/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=181&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/03/09/reading-writing-kurunthogai/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நுண்ணோக்கு - தொலைநோக்கு - ஓர் மட்டைப்பந்து</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/01/16/micro_tele_and_a_ball/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/01/16/micro_tele_and_a_ball/#comments</comments>
		<pubDate>Wed, 16 Jan 2008 13:42:27 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[கவிதை போன்ற ஒன்று]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/2008/01/16/micro_tele_and_a_ball/</guid>
		<description><![CDATA[நுண்ணோக்கு - தொலைநோக்கு - ஓர் மட்டைப்பந்து


மட்டை விட்டகன்று
நேர்கோட்டில் பயணித்து
எல்லையில் நின்றவனின் கைநழுவி
சாலையில் வழிந்தோடிய சிறுபந்து
என் பாதம் தொட்டு நின்றது.


வரும் வழியில்&#8230;

சில்லரை திருட்டிற்காய் சிக்கி
கடைசி கணம் தப்பித்ததை
குறித்த மட்டைக்காரனின் நினைவையும்

கிடைக்கவிருந்த முத்தம்
கைப்பட்டுச்சிதறிய
கண்ணாடிக்கோப்பையின்
ஒலி பாய்ந்து முறிந்ததை
குறித்த எல்லை நின்றவனின் நினைவையும்

&#8230;சுமந்தே வந்திருக்கும்.


எண்ணற்ற மட்டைகளை விட்டகன்ற பந்துகள்
பேரிரைச்சலுடன் பாய்ந்தோடும்
இந்த நிச்சய-அநிச்சய பள்ளத்தாக்கின்
மறுபுறம் ஒளிந்திருக்கிறது
கைசேரும் நழுவும் பந்துகளின் (முத்தங்களின் / தண்டனைகளின்) ரகசியப்பட்டியல்.


&#8216;அங்கிள்&#8230; பால்..&#8217; என்ற விளிக்கு பதிலியாய்
ஒரு ஜதை
வெறும் கண்கள்
கொண்ட சக பயணி
வீசிய பந்தை லாவகமாய் பிடித்து
புன்னகை உமிழ்ந்தான் சிறுவன்.
       [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span style="font-weight:bold;">நுண்ணோக்கு - தொலைநோக்கு - ஓர் மட்டைப்பந்து</span></p>
<div>
<br class="webkit-block-placeholder" /></div>
<div>மட்டை விட்டகன்று</div>
<div>நேர்கோட்டில் பயணித்து</div>
<div>எல்லையில் நின்றவனின் கைநழுவி</div>
<div>சாலையில் வழிந்தோடிய சிறுபந்து</div>
<div>என் பாதம் தொட்டு நின்றது.</div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div>வரும் வழியில்&#8230;</div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div>சில்லரை திருட்டிற்காய் சிக்கி</div>
<div>கடைசி கணம் தப்பித்ததை</div>
<div>குறித்த மட்டைக்காரனின் நினைவையும்</div>
<div></div>
<div>கிடைக்கவிருந்த முத்தம்</div>
<div>கைப்பட்டுச்சிதறிய</div>
<div>கண்ணாடிக்கோப்பையின்</div>
<div>ஒலி பாய்ந்து முறிந்ததை</div>
<div>குறித்த எல்லை நின்றவனின் நினைவையும்</div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div>&#8230;சுமந்தே வந்திருக்கும்.</div>
<div></div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div>எண்ணற்ற மட்டைகளை விட்டகன்ற பந்துகள்</div>
<div>பேரிரைச்சலுடன் பாய்ந்தோடும்</div>
<div>இந்த நிச்சய-அநிச்சய பள்ளத்தாக்கின்</div>
<div>மறுபுறம் ஒளிந்திருக்கிறது</div>
<div>கைசேரும் நழுவும் பந்துகளின் (முத்தங்களின் / தண்டனைகளின்) ரகசியப்பட்டியல்.</div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div><br class="webkit-block-placeholder" /></div>
<div>&#8216;அங்கிள்&#8230; பால்..&#8217; என்ற விளிக்கு பதிலியாய்</div>
<div>ஒரு ஜதை</div>
<div>வெறும் கண்கள்</div>
<div>கொண்ட சக பயணி</div>
<div>வீசிய பந்தை லாவகமாய் பிடித்து</div>
<div>புன்னகை உமிழ்ந்தான் சிறுவன்.</div>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/angumingum.wordpress.com/180/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/angumingum.wordpress.com/180/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/180/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=180&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/01/16/micro_tele_and_a_ball/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/angumingum-128.jpg" medium="image">
			<media:title type="html">Siddharth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் - 2</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/01/08/morrie_2/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/01/08/morrie_2/#comments</comments>
		<pubDate>Tue, 08 Jan 2008 06:39:51 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<category><![CDATA[மோரியுடன் செவ்வாய்க]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/2008/01/08/morrie_2/</guid>
		<description><![CDATA[மோரியோடான செவ்வாய்க்கிழமைகள்

அத்தியாயம் இரண்டு

 பாடத்திட்டம் 
அவரது மரணம் 1994ன் கோடையில் வந்தது. யோசித்துப்பார்க்கையில், அதற்கு வெகு முன்பே ஏதோ கெட்டது வரப்போகிறதென அவருக்கு தெரிந்துவிட்டதென்றே தோன்றுகிறது. நடனமாடுவதை நிறுத்திய நாளே அவருக்கு தெரிந்துவிட்டது.
எனது முதிய பேராசிரியர், எப்போதுமே நடனக்காரராகவே இருந்தார். இசை பற்றிக் கவலையில்லை. அதிரடி இசை, மெல்லிசை, அனைத்தையும் விரும்பினார். கண்களை மூடிக்கொண்டு, மந்தாசப்புன்னகையுடன் அவரது தனி தாளத்திற்கு ஆட ஆரம்பித்துவிடுவார். எப்போதுமே நன்றாக இருக்கும் என கூற முடியாது. ஆனால் அவருக்கு ஆட துணையேதும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div align="center"><b>மோரியோடான செவ்வாய்க்கிழமைகள்</b></div>
<div align="center"></div>
<div align="center">அத்தியாயம் இரண்டு</div>
<div align="center"></div>
<div align="center"><b><u> பாடத்திட்டம் </u></b></div>
<p>அவரது மரணம் 1994ன் கோடையில் வந்தது. யோசித்துப்பார்க்கையில், அதற்கு வெகு முன்பே ஏதோ கெட்டது வரப்போகிறதென அவருக்கு தெரிந்துவிட்டதென்றே தோன்றுகிறது. நடனமாடுவதை நிறுத்திய நாளே அவருக்கு தெரிந்துவிட்டது.</p>
<p>எனது முதிய பேராசிரியர், எப்போதுமே நடனக்காரராகவே இருந்தார். இசை பற்றிக் கவலையில்லை. அதிரடி இசை, மெல்லிசை, அனைத்தையும் விரும்பினார். கண்களை மூடிக்கொண்டு, மந்தாசப்புன்னகையுடன் அவரது தனி தாளத்திற்கு ஆட ஆரம்பித்துவிடுவார். எப்போதுமே நன்றாக இருக்கும் என கூற முடியாது. ஆனால் அவருக்கு ஆட துணையேதும் தேவையில்லை. மோரி தனியாகவே ஆடினார்.</p>
<p>ஹார்வர்ட் சதுக்க தேவாலயத்தில் புதன் இரவுகளில் நடக்கும் &#8220;விருப்பப்படி நடனம்&#8221; (&#8221;Dance Free&#8221; correct trans?)  என்ற நிகழ்விற்கு தவறாமல் செல்வார். மிண்ணும் விளக்குகளும் அதிரும் ஒலிப்பெருக்கியும் கொண்ட, பெரும்பாலும் மாணவர்களே நிறைந்த அறையில், வெள்ளை சட்டை கருப்பு பைஜாமா கழுத்தில் துண்டு சகிதமாக, எந்த இசை ஒலிக்கிறதோ, அதற்கு நடமாடிக்கொண்டிருப்பார் மோரி. சுழல்வார், திரும்புவார், கைகளை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டிருப்பார் - முதிகில் வேர்வை வழியும் வரை. பல புத்தகங்களை எழுதிய, பல வருடங்கள் கல்லூரிப் பேராசிரியராக அனுபவம் கொண்ட மிக முக்கியமான சமூகவியல் ஆய்வாளர் அவர் என்பது அங்கு யாருக்கும் தெரியாது. இவர் யாரோ வயதான பைத்தியம் என்றே அங்கு நினைத்திருந்தனர்.</p>
<p>ஒரு முறை டாங்கோ இசை ஒலிநாடாவை கொண்டு வந்து, ஒலிப்பெருக்கிகளில் போடச்செய்தார். பொங்கியெழுந்த டாங்கோ இசைக்கு தேர்ந்த லத்தீன் காதலரைப்போல மேலும் கீழும் முன்னும் பின்னும் என தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தார். ஆடி முடித்ததும் அரங்கில் எழுந்த கரகோஷம் அவரை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. அக்கண உணர்வை கொண்டு வாழ்க்கை முழுவது வாழ்ந்துவிட்டிருக்கலாம்.</p>
<p>ஆனால் ஒரு நாள் நடனம் நின்றது.</p>
<p>அறுபதுகளில் அவருக்கு ஆஸ்துமா உருவாகத்தொடங்கியது. முச்சுவிடுதல் ஓர் பணியாக மாறியது. ஒரு முறை சார்லஸ் நதிக்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது வீசிய குளிர்க்காற்று இவரை மூச்சுத்திணரச்செய்தது. அவசரமாய் மருத்துவமணை கொண்டுச்சொல்லப்பட்டு அட்ரலின் ஏற்றப்பட்டது.</p>
<p>சில வருடங்கள் கழித்து, நடப்பதில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் தடுமாறி விழுந்துவிட்டார். இன்னோர் இரவு, திரையரங்கின் படிகளில், சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியுற, கீழே விழுந்தார்.</p>
<p>&#8220;அவருக்கு காத்து வேணும். தள்ளி நில்லுங்கப்பா&#8221; என்றார் ஒருவர்.</p>
<p>அப்போது அவர் தனது எழுபதுகளில் இருந்தார். சுற்றி இருந்தவர்கள், &#8220;வயசாயிடுச்சு பா&#8221; என்று முனுமுனுத்தபடி அவரை தூக்கிவிட்டனர். ஆனால் தனது உடலினைப் பற்றிய அறிதல் நம்மை விட அதிகமான அவருக்கு பிரச்சனை வேறேதோ என தோன்றியது. இது வெறும் வயது சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல. என்னேரமும் அயற்வாகவே இருந்தது. தூங்குவதிலும் பிரச்சனைகள் இருந்தன. தான் இறந்துக்கொண்டிருப்பதை போன்று கனவுகள் வந்தன.</p>
<p>அவர் மருத்துவர்களை பார்க்க ஆரம்பித்தார். ரத்தத்தை பரிசோதித்தனர். சிறுநீரை பரிசோதித்தனர். பின் பக்கமாக குழாய் விட்டு குடலை பரிசோதித்தனர். இவையெதுவும் விடையளிக்காததால், ஒரு மருத்துவர் அவரது தொடை தசையை கொஞ்சம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். நரம்பியல் பிரச்சனை ஏதோ இருப்பதை போல பட்டதால் அவரை மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தினர். அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, நரம்புகளின் உணர்ச்சிகளை கூர்ந்து கவனித்தனர்.</p>
<p>&#8220;இத இன்னும் கொஞ்சம் ஆழமா பாக்கனும்&#8221; என்றார்கள் மருத்துவர்கள், அவரது சோதனை முடிவுகளை நோக்கியபடி.</p>
<p>&#8220;ஏன், என்ன ஆச்சு?&#8221; என்றார் மோரி</p>
<p>&#8220;சரியா சொல்ல முடியல. ஆனா உங்க காலம் மெதுவா இருக்கு.&#8221; காலம் மெதுவாக உள்ளதா? என்ன அர்த்தம் இதற்கு?</p>
<p>இறுதியாக, ஆகஸ்ட் 1994ன் வெயிலும் ஈரப்பதமுமான ஓர் நாளில் மோரியும் அவரது மனைவி சார்லட்டும் நரம்பியல் நிபுணரின் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களை அமரச்செய்து, மெல்ல அந்த செய்தியை உடைத்தார். மோரிக்கு வந்துள்ளது அம்யோடைப்பிக் லேட்டரல் ஸ்க்லெரோஸிஸ் (amyotrophic lateral sclerosis (ALS)), மிகக்கொடிய நரம்பு நோய்.</p>
<p>இதற்கு தீர்வு (cure) ஏதும் இல்லை.</p>
<p>&#8220;எனக்கு எப்படி வந்துது இது?&#8221; என்றார் மோரி. யாருக்கும் தெரியவில்லை.</p>
<p>&#8220;உயிர் கொல்லி நோயா இது?&#8221;</p>
<p>&#8220;ஆமாம்&#8221;</p>
<p>&#8220;அப்ப, நான் சாகப்போறனா?&#8221;</p>
<p>ஆமாம் என்றார் மருத்துவர். மன்னிக்கனும்.</p>
<p>மோரியுடனும் சார்லட்டுடனும் இரண்டு மணி நேரம் அமர்ந்து அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். அவர்கள் புறப்படுகையில், ஏ.எல்.எஸ் குறித்த சிறு சுற்றறிக்கைகளை கொடுத்தார் மருத்துவர்.  அவர்கள் ஏதோ வங்கி கணக்கு திறக்கப்போவதை போல. வெளியே வெயில் அடித்துக்கொண்டிருந்தது. மக்கள் அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஒரு பெண் வாகன நிறுத்தத்தில் காசை போட ஓடினார். இன்னொருவர் மளிகை சாமான்களை சுமந்தபடி சென்றார். சார்லெட்டின் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் அலை மோதின : இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு நமக்கு? எப்படி சமாளிக்கப்போறோம் ? செலவுக்கு என்ன செய்யப்போறோம் ?</p>
<p>எனது பேராசிரியரை, தன்னைச்சுற்றிலும் இருந்த நிகழ்வுகளின் வழமை,  தாக்கியது. உலகம் நின்றிருக்க வேண்டாமா? எனக்கு என்ன ஆனது என இவர்களுக்கு தெரியவில்லையா?</p>
<p>ஆனால் உலகம் நிற்கவில்லை, இவர்களை கவனிக்கக்கூட இல்லை. காரின் கதவை மெல்ல திறந்த போது, பள்ளத்திற்குள் விழுவதைப்போல உணர்ந்தார் மோரி.</p>
<p>இனி என்ன?</p>
<p>எனது பேராசிரியர் விடையை தேடிக்கொண்டிருக்கையில் நோய் அவரை வெல்லத்தொடங்கியது. நாளுக்கு நாள். வாரத்திற்கு வாரம். ஒரு நாள் தனது காரை வெளியே எடுக்கையில் பிரேக்கை அழுத்த முடியாமல் போனது. அன்றுடன் வாகனம் ஓட்டுவது நின்றது.</p>
<p>நடக்கையில் தடுக்கியபடியே இருந்ததினால் ஒரு ஊன்றுகோல் வாங்கினார். அன்றிலிருந்து இயல்பாக நடப்பது நின்றது.</p>
<p>வை.எம்.சி.ஏ வில் நீச்சலுக்கு சென்றுகொண்டிருந்தார். ஆனால் தானாக உடைகளை களைய முடியாது போனது. ஆகவே, குளத்தில் இறக்கி, ஏற்ற, உடைகளை களைத்து மாட்ட தனது முதல் உதவியாளரை - டோனி என்ற சமயவியல் மாணவனை - வேலைக்கு சேர்த்தார். அதோடு அவரது தனிமை முடிவுக்கு வந்தது.</p>
<p>1994ன் இலையுதிர் காலத்தில் தனது கடைசி விரிவுரைக்காக பிராண்டைஸ் வளாகத்திற்கு வந்தார். அவர் இதை தவிர்திருக்கலாம். பல்கலைக்கழகம் ஒன்றும் சொல்லி இருக்காது. அவர்களுக்கு புரிந்திருக்கும். ஏன் இத்தனை மக்களின் முன் கஷ்டப்படவேண்டும்? வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் மோரிக்கு, வேலையை விடும் எண்ணம் தோன்றவேயில்லை.</p>
<p>மாறாக 20 வருடங்களாக தனது வீடு போல இருந்த அந்த வகுப்பறைக்குள் மிக மெல்ல விந்தி விந்தி நுழைந்தார் மோரி. ஊன்றுகோல் உதவியுடன் நடந்தபடியால் மெல்லமாகவே தனது இருக்கைக்கு செல்ல முடிந்தது. அமர்ந்து, கண்ணாடியை மேஜையின் மீது போட்டு விட்டு, நிசப்தத்துடன் தன்னை நோக்கிய மாணவர்களை பார்த்தார்.</p>
<p>&#8220;நண்பர்களே, நீங்க எல்லாம் சமூக உளவியல் படிக்க வந்திருக்கீங்கன்னு நினைக்கறேன். 20 வருஷமா இத நடத்தறேன். ஆனா முதன்முறையா சொல்றேன், இந்த பாடத்த எடுக்கறது உங்களுக்கு ஆபத்தானது. ஏன்னா எனக்கு ஒரு உயிர்கொல்லி நோய் வந்திருக்கு. ஆண்டு இறுதி வரைக்கும் உயிரோட இருப்பனான்னு சொல்ல முடியாது&#8221;</p>
<p>&#8220;இது உங்களுக்கு ஒரு பிரச்சனையா பட்டுதுன்னா நீங்க இந்த பாடத்துல இருந்து விலகலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது&#8221;</p>
<p>புன்னகைத்தார்.</p>
<p>அவரது ரகசியம் அதோடு முடிவிற்கு வந்தது.</p>
<p>ஏ.எல்.எஸ், ஏற்றிவைத்த மெழுகுவத்தியை போன்றது. நரம்புகளை உருக்கி, உடலை மெழுகுக்குவியலென ஆக்கிவிடும். பெரும்பாலும், கால்களில் தொடங்கி, மெல்ல மேலே ஏறும். உங்களின் தொடை தசைகளின் மீதான ஆளுமையை மறைந்து, நிற்பதே இயலாததாகிவிடும். இடுப்புத் தசைகள் செயலிழக்க, நேராக அமர்வது கடினமாகும். இறுதியில் இன்னும் உயிருடன் இருந்தால், நீங்கள் தொண்டையினுள் செலுத்தப்பட்ட குழாயின் மூலம் மூச்சிவிட்டுக்கொண்டிருக்க, தெளிந்த விழிப்புடன் உள்ள உங்களின் உள்ளமோ, ஒன்றிற்கும் உதவாத -கூடிப்போனால், கண்களை மட்டும் இமைக்கக்வும், நாக்கினை சொடுக்கவும் மட்டும் கூடிய - கூட்டினுள் அடைபட்டிருக்கும், அறிவியல் புனைக்கதைகளில் உடலுடன் உறைந்து போன மனிதனைப்போல. எப்படி போனாலும் நோய் வந்து 5 வருடங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது.</p>
<p>மோரியின் மருத்துவர்களின் அனுமானத்தின் படி, அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. ஆனால் அதை விடவும் குறைவே என அவருக்கு தெரிந்திருந்திருந்தது.</p>
<p>தலைக்கு மேல் கத்தி தொங்க, மருத்துவமணையில் இருந்து வெளியேறிய நிமிடம், மோரி ஓர் மிகப்பெரிய முடிவெடுத்தார். நான் இனி உதிர்ந்து மறைவதா அல்லது மீதமிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்குவதா? என தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.</p>
<p>அவர் உதிரப்போவதில்லை. மரணத்தின் முன் அவமானப்படப்போவதில்லை.</p>
<p>மாறாக, மரணத்தை தனது கடைசி திட்டப்பணியாய், இனிவரும் நாட்களின் மையமாய் ஆக்கபோகிறார். அனைவரும் இறக்கப்போகிறோம் என்பதால், அவர் முக்கியமான VALUE, அல்லவா? அவர் ஒரு ஆய்வாகலாம். ஒரு மனித பாடப்புத்தகம். எனது மெதுவான, நிதானமான மரணத்தில் என்னை படியுங்கள். எனக்கு என்ன நேர்கிறதென காணுங்கள். மெல்ல, என்னுடன் கற்றுக்கொள்ளுங்கள்.</p>
<p>மோரி வாழ்விற்கும் இறப்பிற்குமான அந்த இறுதி பாலத்தை கடப்பார், தனது பயணத்தை விவரித்தபடி.</p>
<p>இலையுதிர்கால பாடகாலம் விரைவில் முடிந்தது. மாத்திரைகள் அதிகரித்தன. சிகிச்சை, அன்றாட நிகழ்வானது.</p>
<p>மோரியின் தளரும் கால்களுக்கு செயலூட்ட அவரது இல்லத்திற்கு வந்த செவிலிகள், அவரது கால்களை முன்னும் பின்னுமாக, கிணற்றிலிருந்து நீர் இரைப்பதை போல, நகர்த்தி தசைகளை உயிர்ப்பிக்க முயற்சித்தனர். மசாஜ் வல்லுனர் வாரமொருமுறை வந்து கால்களில் படரும் இறுக்கத்தை போக்க முயற்சித்தார். தியான ஆசிரியருடனான சந்திப்புகளில், கண்களை மூடி, அலைபாயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது முழு உலகத்தையும், ஒரு சுவாசத்திற்கும் அடக்க முயற்சித்தார். உள்ளே, வெளியே, உள்ளே, வெளியே&#8230;</p>
<p>ஒரு நாள் ஊன்றுகோலுடன் நடந்த போது, படிகளில் காலிடறி விழ நேர்ந்தது. ஊன்றுகோல் போய், நடப்பான் (Walker) வந்தது. அவரது உடல் வலுவிழந்துகொண்டிருந்ததனால், கழிப்பறைக்கு சென்று வருவது பாரமாய் மாறியது. பெரிய குடுவையில் சிறுநீர் கழிக்கத்தொடங்கினார். இதை செய்யும்போது அவர் தன்னைத்தானே தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் குடுவையை வேறொருவர் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.</p>
<p>நம்மில் பலருக்கு இவையெல்லாம் அவமானமாக இருந்திருக்கும், குறிப்பாக மோரியின் வயதில். ஆனால் மோரி நம்மில் பலரைப்போல அல்ல. தன்னைக்காண வரும் நெருங்கிய நண்பர்களிடம் “இதோ பார். நான் மூத்திரம் போகனும். கொஞ்சம் உதவ முடியுமா? உனக்கொன்னும் பிரச்சனை இல்லையே?” என்பார்.</p>
<p>பெரும்பாலும், இதில் பிரச்சனையேதும் இல்லாதது, அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.</p>
<p>உண்மையில் அவர் இப்போது தன அதிகமாக விருந்தினர்களை சந்திக்க ஆரம்பித்தார். மரணத்தை குறித்து, அதன் அர்த்தத்தை குறித்து, அதை புரிந்துகொள்ளாமலேயே, அதை கண்டு பயப்படும் நமது சமூகத்தை குறித்தெல்லாம் கருத்தரங்குகள் நிகழ்த்தினார். மோரி தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் இது தான். தனக்கு உதவவேண்டும் என தோன்றினால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், தன்னை பரிதாபதுடன் பார்க்காமல், எப்பொழுதும் போல தன்னை சந்தித்தும், உரையாடியும், தங்களது பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். மோரி பொறுமையாக நாம் கூறுவதை கேட்கக்கூடியவர் என்பதனால், அவரிடம் தங்களது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்வது நண்பர்களுக்கு வாடிக்கை.</p>
<p>இத்தனைக்கு பிறகும், மோரியின் குரல் பலமும், வரவேற்பும் நிறைந்ததாகவும், மனம் ஒரு கோடி எண்ணங்களுடனும் துடிப்புடனும் இருந்தது. “இறத்தல்” என்பதன் அர்த்தம் “உபயோகமற்று போதல்” எனும் எண்ணத்தை தகர்க்கவேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட்டார்.</p>
<p>புத்தாண்டு வந்து போனது. யாரிடமும் கூறவில்லையெனினும், இதுவே தனது கடைசி ஆண்டு என மோரிக்கு தெரிந்திருந்தது. அவர் இப்போது சக்கர நாற்காலி உபயோகிக்கத்தொடங்கியிருந்தார். தனக்கு பிரியமானவர்களிடன் கூற நினைத்ததையெல்லாம் கூறிவிடவேண்டுமென காலத்துடம் போராடிக்கொண்டிருந்தார்.</p>
<p>பிரண்டேயில் தனது சகபணியாளர் மாரடைப்பு காரணமாக இறந்த போது அவரது இறுதிச்சடங்கிற்கு சென்று சோகமாய் வீடு திரும்பினார்.</p>
<p>“ச்ச, எல்லாம் வீண்” என்றார் அவர். “ அத்தன பேர் அருமையான விஷயங்கள சொன்னாங்க. ஆனா அதயெல்லாம் கேக்க இர்வ் இல்ல”.</p>
<p>மோரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சில தொலைபேசி அழைப்புகள். தேதி குறித்தல். ஓ