<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>அங்கிங்கெனாதபடி</title>
	<atom:link href="http://angumingum.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://angumingum.wordpress.com</link>
	<description>அந்த சிட்டுக்குருவியை போலே...</description>
	<lastBuildDate>Wed, 16 Sep 2009 07:14:08 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='angumingum.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/ed67dc5ac05384d78be42a3478cd0b6a?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>அங்கிங்கெனாதபடி</title>
		<link>http://angumingum.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>பிரதீபன் கவிதைகள்</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/09/16/pradeepanpoems/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/09/16/pradeepanpoems/#comments</comments>
		<pubDate>Wed, 16 Sep 2009 07:14:08 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கடந்து சென்ற கவிதை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=262</guid>
		<description><![CDATA[ராஜமார்த்தாண்டன் தொகுத்த &#8220;கொங்குதேர் வாழ்க்கை&#8221; என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=262&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ராஜமார்த்தாண்டன் தொகுத்த &#8220;கொங்குதேர் வாழ்க்கை&#8221; என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக சொற்பமே.</p>
<blockquote><p>பிரதீபன்<br />
(1952) தூத்துக்குடியில் வங்கி அலுவலராக பணியாற்றுகிறார்.<br />
நானா உன் எதிரி (1982), மொட்டை கோபுரம் (1989)</p></blockquote>
<p>அவ்வளவே.</p>
<p>தொகுப்பில் பிரதீபனின் 11 கவிதைகள் தரப்பட்டிருந்தன. இவரது கவிதைகளில் தெரிந்த கச்சிதமும் கவிதையினூடாக காணக்கிடைத்த ஆளுமையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாதிரிக்கு, நான் ரசித்த மூன்று கவிதைகளை இங்கு இடுகிறேன்.</p>
<blockquote><p>திருவோடு ஏந்தி<br />
தெருவழியே போனால்<br />
சோறுதான் விழும்;<br />
வேட்டி விழலாம்;<br />
ஒதுங்கிக் கொள்ள<br />
திண்ணையில் இடமும் தருவார்கள்;<br />
நீ கேட்பது போல்<br />
ஒருபோதும் மலர் விழுவதில்லை.</p></blockquote>
<p>*</p>
<blockquote><p>ஒளியை மட்டும்<br />
உண்டு வாழும் புள்<br />
ஓர்<br />
அழகிய கற்பனை என்று<br />
தோன்றாதா?</p>
<p>எச்சிலும் மிச்சிலும் கொறித்துண்ண<br />
இருளில் வந்து நடமாடி<br />
சப்தம் கேட்ட மாத்திரத்தில்<br />
பாய்ந்து சென்று<br />
வளைக்குள் பதுங்கும் வாழ்வே<br />
தான் என்று துலங்காதா?</p>
<p>புள் அன்மை புரிந்தாலும்<br />
ஊரும் நிலை ஓர்ந்தபின்னும்<br />
கண்களால் வானம் தழுவி<br />
களிக்கும் பழக்கம்<br />
எதில் சேர்த்தி?</p></blockquote>
<p>*</p>
<blockquote><p>புனல் ஓடிப்போனப்பின்<br />
வெண்மையாய்<br />
மெத்துமெத்தென்று<br />
மணல் பரந்து கிடந்தது<br />
ஓடை;<br />
பார்க்கப் பார்க்க<br />
ஆசையாயிருந்தது குழந்தைக்கு;<br />
சரி,<br />
தன் காலைப் பதித்துத்<br />
தடம் செய்ய வேண்டுமென்று<br />
ஏன் தோன்றுகிறது.</p></blockquote>
<p>இவரை பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரியுமா? அந்த இரு கவிதை தொகுப்புகளும் எங்காவது கிடைக்குமா இப்போது?</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/262/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=262&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/09/16/pradeepanpoems/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கவிதை &#8211; ரோபர்டோ யூரோஸ்</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/09/09/robertojuarroz1/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/09/09/robertojuarroz1/#comments</comments>
		<pubDate>Wed, 09 Sep 2009 11:30:10 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[அயல் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கடந்து சென்ற கவிதை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=258</guid>
		<description><![CDATA[ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,
ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை சுவாசிக்க செய்கின்றது.
எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,
எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை மீண்டெழச் செய்கின்றது.
எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,
எல்லா மரணமும் இன்னொரு உரு.
ஆனாலும்,
இவற்றின் இணைவு
நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.
- ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)
யூரோஸின் சில கவிதைகள் இத்தளத்தில் உள்ளன : http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=258&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div id="attachment_259" class="wp-caption alignnone" style="width: 250px"><img class="size-full wp-image-259" title="Roberto_Juarroz" src="http://angumingum.files.wordpress.com/2009/09/roberto_juarroz.jpg?w=240&#038;h=237" alt="ரோபர்டோ யூரோஸ்" width="240" height="237" /><p class="wp-caption-text">ரோபர்டோ யூரோஸ்</p></div>
<p>ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,<br />
ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.<br />
ஆனாலும்<br />
இவற்றின் இணைவு<br />
நமை சுவாசிக்க செய்கின்றது.</p>
<p>எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,<br />
எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.<br />
ஆனாலும்<br />
இவற்றின் இணைவு<br />
நமை மீண்டெழச் செய்கின்றது.</p>
<p>எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,<br />
எல்லா மரணமும் இன்னொரு உரு.<br />
ஆனாலும்,<br />
இவற்றின் இணைவு<br />
நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.</p>
<p>- <a href="http://en.wikipedia.org/wiki/Roberto_Juarroz" target="_blank">ரோபர்டோ யூரோஸ்</a> (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)</p>
<p>யூரோஸின் சில கவிதைகள் இத்தளத்தில் உள்ளன <span style="background-color:#ffffff;">: <a href="http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html">http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html</a></span></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/258/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=258&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/09/09/robertojuarroz1/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2009/09/roberto_juarroz.jpg" medium="image">
			<media:title type="html">Roberto_Juarroz</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அசாயலை அடைந்த பிள்ளையார் ;)</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/08/24/asaayalpillaiyaar/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/08/24/asaayalpillaiyaar/#comments</comments>
		<pubDate>Mon, 24 Aug 2009 15:22:16 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=250</guid>
		<description><![CDATA[
இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன்  முகம் செய்தேன்
முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்றார்கள்
இந்த முறை
உறவின் அடையாளங்களில் இருந்து
கழன்று ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அசாயலை
அடைவதற்கு
ஆகிவிட்டது இத்தனை காலம்.
- கல்யாண்ஜி
(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது.    அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.    )
    [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=250&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="alignleft size-full wp-image-249" title="pillaiyaar" src="http://angumingum.files.wordpress.com/2009/08/img_0445.jpg?w=600&#038;h=337" alt="pillaiyaar" width="600" height="337" /></p>
<p>இந்த வருடமும்<br />
சரஸ்வதி பூஜைக்கு<br />
அம்மன்  முகம் செய்தேன்<br />
முன்பு<br />
தங்கச்சி சாயலில்<br />
முகம் இருக்கும்<br />
இடையில்<br />
இவள் சாயலில் இருக்கிறது<br />
என்றார்கள்<br />
இந்த முறை<br />
உறவின் அடையாளங்களில் இருந்து<br />
கழன்று ஒரு முகத்துடன்<br />
சரஸ்வதி உருவம் சிரித்தது.<br />
அசாயலை<br />
அடைவதற்கு<br />
ஆகிவிட்டது இத்தனை காலம்.</p>
<p>- கல்யாண்ஜி</p>
<p>(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் <a href="http://gayatri8782.blogspot.com">மனைவி</a> நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />   அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />   )</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/250/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=250&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/08/24/asaayalpillaiyaar/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2009/08/img_0445.jpg" medium="image">
			<media:title type="html">pillaiyaar</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அதிநாயகமாக்கம்</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/08/24/uberhero/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/08/24/uberhero/#comments</comments>
		<pubDate>Mon, 24 Aug 2009 09:33:12 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கம்பராமாயணம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[திருக்குறள்]]></category>
		<category><![CDATA[பழந்தமிழ் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[புறநானூறு]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=243</guid>
		<description><![CDATA[கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.
வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை&#8217; என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்
யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.
இராமன் முடிசூட்டிக்கொள்ள [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=243&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.</p>
<blockquote><p>வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி<br />
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை&#8217; என்பார்<br />
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,<br />
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்</p></blockquote>
<p><strong>யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.</strong></p>
<p>இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது  ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.</p>
<blockquote><p>&#8220;காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு&#8230;&#8221;</p></blockquote>
<p>காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.</p>
<blockquote><p>&#8220;கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல்  “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.</p>
<p>பின்பு பலர் அழுதனர்.&#8221;</p></blockquote>
<p>ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்&#8230; என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?</p>
<p>கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற&#8230;. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது&#8230;</p>
<p>யோசிக்கையில் தோன்றுகிறது.  தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்&#8230;&#8230;.</p>
<p><span style="background-color:#ffffff;">புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.</span></p>
<blockquote><p>களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து<br />
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்<br />
எண் தேர் செய்யும் தச்சன்<br />
திங்கள் வலித்த கால் அன்னோனே</p></blockquote>
<p><strong>போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.</strong></p>
<blockquote><p>என்ஐமுன்	நில்லன்மின்	தெவ்விர்	பலர் என்ஐ<br />
முன்நின்று	கல்நின்	றவர்.</p></blockquote>
<p>என்கிறார் வள்ளுவர்.</p>
<p><strong>என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.</strong></p>
<p>அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.</p>
<p>இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து &#8220;தலைமை பிம்பங்கள்&#8221; தோன்றுகின்றன?</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/243/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=243&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/08/24/uberhero/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வென்றவர்கள்</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/08/11/conquerors/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/08/11/conquerors/#comments</comments>
		<pubDate>Tue, 11 Aug 2009 06:00:57 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[அயல் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கடந்து சென்ற கவிதை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=239</guid>
		<description><![CDATA[வென்றவர்கள் &#8211; யோ ஃபெங்
எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள்
பலர் வழியிலேயே இறக்க
எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர்.
காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர்.
அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும்
உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை.
காமெராக்கள் காட்டாது விட்டன
அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை.
அவர்கள் சுமைதூக்கிகள்
வென்றவர்களாய் கருதப்படுவதில்லை
இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால்
சோமோலுங்மாவை* வெல்ல
யாருக்கும் உதவுவார்கள் அவர்கள்.
சோமோலுங்மா &#8211; இமய மலையின் திபெத்திய பெயர்.
ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=239&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>வென்றவர்கள் &#8211; யோ ஃபெங்</strong></p>
<p>எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள்<br />
பலர் வழியிலேயே இறக்க<br />
எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர்.<br />
காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர்.<br />
அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும்<br />
உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை.<br />
காமெராக்கள் காட்டாது விட்டன<br />
அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை.<br />
அவர்கள் சுமைதூக்கிகள்<br />
வென்றவர்களாய் கருதப்படுவதில்லை<br />
இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால்<br />
சோமோலுங்மாவை* வெல்ல<br />
யாருக்கும் உதவுவார்கள் அவர்கள்.</p>
<p><em>சோமோலுங்மா &#8211; இமய மலையின் திபெத்திய பெயர்.</em></p>
<p><a href="http://china.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14698&amp;x=1" target="_blank">ஆங்கிலம்</a> வழி தமிழில் : சித்தார்த்</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/239/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=239&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/08/11/conquerors/feed/</wfw:commentRss>
		<slash:comments>14</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு&#8230;</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/08/10/onderryswalls/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/08/10/onderryswalls/#comments</comments>
		<pubDate>Mon, 10 Aug 2009 05:42:33 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[அயல் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கடந்து சென்ற கவிதை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=234</guid>
		<description><![CDATA[”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல&#8230; விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது.
சமீபத்தில் வரலாறை மையமாக கொண்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=234&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல&#8230; விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது.</p>
<p>சமீபத்தில் வரலாறை மையமாக கொண்ட சில கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. முதல் வாசிப்பிலேயே கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது “புரிந்துவிடுகிறது”. ஆனால் எதைப்பற்றி பேசுகிறது? இக்கவிதையில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வு என்ன? என எதுவும் தெரியாது. இருக்கவே இருக்கிறதே கூகுள். ஒரு நடை போய் தேடிப்படித்துவிட்டு வந்து மீண்டும் கவிதையை வாசித்தால்&#8230; மூக்குக்கண்ணாடி கடையினில் கண்ணாடியை மாற்ற மாற்ற காட்சியின் தெளிவு கூடிக்கொண்டே வருமே&#8230; அப்படித்தான் புரிதல் கூடிக்கொண்டே வந்தது.</p>
<p>Kerry Hardy எழுதிய &#8220;On Derry&#8217;s Walls&#8221; என்ற கவிதை.</p>
<blockquote><p><strong>டெர்ரியின் சுவரின் மேல்&#8230;  &#8211; கெர்ரி ஹார்டி.</strong></p>
<p>ஒரு பொருளை, அதனினும் நுட்பமான<br />
ஒன்றை கொண்டே விளக்க முடியும்.<br />
அன்பினும் நுட்பமான வேறொன்றில்லை.<br />
எனில்<br />
எதை கொண்டு அன்பை விளக்க?</p>
<p>- சும்னன் இப்ன் ஹம்சா அல்-முஹைப்</p>
<p>கல்லறைத்தோட்டத்தில் வாழும் கரும்பறவை<br />
குளிர்கால நாளொன்றின் அந்தியில் சுவரில் வந்தமர்கிறது.<br />
அது புழுக்களை தின்றிருக்கிறது.<br />
புழுக்கள், இறந்த புரொட்டஸ்டண்ட்களின் களிமண்ணை.</p>
<p>ஆயினும் அப்பறவை நுட்பமானது.<br />
பிரகாசமானதும் கூட.<br />
அதை விளக்கும்,<br />
விளக்கவியலா அன்பை போல.</p>
<p>மற்றவற்றை குறித்து ஏதுமில்லை சொல்ல,<br />
“அது இப்படி தான் இருந்தது” கூட இல்லை.<br />
ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்<br />
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” &#8211; என்பதை மட்டுமே.</p>
<p>கரும்பறவையின் வளைந்த குடலினுள்<br />
அனைத்தும் நிறைவுறுகின்றன.</p></blockquote>
<p>ஆங்கில வடிவம் <a href="http://ireland.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=13789&amp;x=1" target="_blank">இங்கே</a></p>
<p>அயர்லாந்த் கவிஞர் கெர்ரி ஹார்டியின் இந்த கவிதையில்</p>
<blockquote><p>”ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்<br />
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” &#8211; என்பதை மட்டுமே”</p>
<p>(because all we can ever say<br />
is This is how it looked to me – )</p></blockquote>
<p>என்ற வரி தான் முதல் வாசிப்பில் என்னை ஈர்த்தது. வரலாறு என்பது நிகழ்வுகளின் ஒரு கோணம் மட்டுமே. நாம் நமதென கொள்ளும் அனைத்துக்கருத்துக்களும் கோணங்கள் மட்டுமே. நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம் &#8220;அது அப்படி தான் எனக்கு தெரிந்தது&#8221; என்பதை மட்டும் தான். இந்த வரி தான் என்னை இக்கவிதையை மொழிபெயர்க்க உந்தியது.</p>
<p>கவிதையின் பெயர் காரணம் பிடிபடவில்லை. எனக்கு அயர்லாந்து வரலாறு பற்றி ஏதும் தெரியாது. இஸ்ரேல் பற்றிய நாவல்களை எழுதிய லியோன் யூரிஸை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த காலத்தில் அயர்லாந்த் குறித்து அவர் எழுதிய Trinity வாசித்திருக்கிறேன். படித்ததில் பாதி புரியவில்லை. இக்கவிதையை மேலும் புரிந்துகொள்ள டெர்ரி குறித்து கூகுளில் தேடினேன்.</p>
<p>10ஆம் நூற்றாண்டிற்கு பின்னான அயர்லாந்த் ஒரு கத்தோலிக்க பகுதியாகவே இருந்து வந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிகழ்ந்த மத சீர்த்திருத்தங்களால் ப்ரோடெஸ்டண்ட் (சீர்திருத்தவாதம்?) கிருத்துவம்  இங்கிலாந்தின் ஆதிக்க மதமாக உருகொள்கிறது. இதே காலகட்டத்தில் இங்கிலாந்த் அயர்லாந்தினுள் கால் வைக்கத்தொடங்குகிறது. அதை அயர்லாந்த் விரும்பவில்லை, எதிர்க்கிறது. பிரச்சனை கத்தோலிக்க மதம் &#8211; ப்ரோடஸ்டெண்ட் மதம் என்ற மத அடையாளத்தோடு தொடர்கிறது. கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோடஸ்டண்ட்களுக்குமிடையே நிறைய சண்டைகள் நிகழ்கின்றன. இரு பிரிவுகளுமே பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். டெர்ரி நகரம் அயர்லாந்த் இங்கிலாந்த் எல்லையில் உள்ள நகரம் என்பதால் இந்நாடுகளின் வரலாறு டெர்ரியில் குவிமையம் கொள்கிறது.</p>
<p>இங்கே போர்களில் இறந்த ப்ரோடெஸ்டண்ட்களின் உடல் செறிந்த மண்ணை உண்டபடியே அமர்ந்திருக்கிறது கல்லறைத்தோட்டத்து பறவை. காலம் உறைந்து நிற்கும் அந்தப் பறவை நம் ”வரலாறு”களை எல்லாம் மெல்ல மெல்ல உண்டு செறித்துகொண்டிருக்கிறது.</p>
<p>தேவதேவனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.</p>
<blockquote><p>ஒரு சிறு குருவி<br />
என் வீட்டுக்குள் வந்து<br />
தன் கூட்டை கட்டியது ஏன் ?<br />
அங்கிருந்தும்<br />
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?<br />
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து<br />
விருட்டென்று தாவுகிறது அது<br />
மரத்துக்கு<br />
மரக்கிளையினை<br />
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து<br />
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது<br />
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி</p>
<p>சுரீலென தொட்டது அக்கடலை என்னை<br />
ஒரு பெரும் பளீருடன்<br />
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்</p>
<p>நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை</p>
<p>ஓட்டுக் கூரையெங்கும்<br />
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்<br />
வீட்டு அறைகளெங்கும்<br />
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.</p></blockquote>
<p>தேவதேவனின் குருவியும் கெர்ரி ஹார்டியின் காக்கையும் காண்பது ஒன்றையே தான். தூரத்திருந்து பார்க்கையில் புலப்படும் நம் வாழ்வின் “சிக்கல்”களுக்கு பின்னிருக்கும் அபத்தம்.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/234/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=234&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/08/10/onderryswalls/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாரதியார் கதைகள்</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/08/05/barathy_stories/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/08/05/barathy_stories/#comments</comments>
		<pubDate>Wed, 05 Aug 2009 08:58:53 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=229</guid>
		<description><![CDATA[தமிழ் இலக்கியவாதிகளின் வறுமைக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக பாரதி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பாரதியாரின் கதைகளை படிக்கும் போது அவர் எவ்வளவு குதூகலமான மனிதராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. கீழ் வரும் பத்தியை பாருங்கள்&#8230;
மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கடுண்டனூரதிப ராமசாமி கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கறுநிறம், நரைபாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் நவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=229&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தமிழ் இலக்கியவாதிகளின் வறுமைக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக பாரதி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பாரதியாரின் கதைகளை படிக்கும் போது அவர் எவ்வளவு குதூகலமான மனிதராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. கீழ் வரும் பத்தியை பாருங்கள்&#8230;</p>
<blockquote><p>மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கடுண்டனூரதிப ராமசாமி கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கறுநிறம், நரைபாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் நவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் சூழ்ந்த கண்கள். இமைப்புரங்களில் &#8216;காக்கைக்கால்&#8217; அடையாளங்கள். பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும் புகையிலைச் சாற்றாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகரமான உடல். பிள்ளை யார் வயிறு. ஒரு விதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள். பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு காளாஞ்சி. ஒரு அடப்பைக்காரன் &#8211; இது தான் ராமசாமிக் கவுண்டர்.</p></blockquote>
<p>பாரதி எழுதிய &#8220;சின்ன சங்கரன் கதை&#8221; என்ற முடிவுறாத கதையின் ஒரு பத்தி இது.தமிழ் சிறுகதைகளுக்கான முன்மாதிரியை பாரதியே ஏற்படுத்திக்கொடுத்தார் என்றார் யுவன் ஒருமுறை. இப்போது &#8220;பாரதியார் கதைகள்&#8221; (வானதி பதிப்பகம்) வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த கூற்று முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றுகிறது. கிண்டலும் குதூகலமுமான புதுமைப்பித்தனின் நடைக்கு பாரதியே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என்று படுகிறது. காக்காய் பார்லிமெண்ட் என்ற சிறிய கதையில் ஒரு பத்தி.</p>
<blockquote><p>பக்கத்து வீட்டு மெத்தைச்சுவரின் மேல் நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கிறது. &#8220;நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மையில் சொல்ல வேண்டாமோ?&#8221; என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றன. &#8220;போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?&#8221; என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்கிறேன். அதுபற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்கை பார்லிமெண்டைக் குறித்து தான் பேச்சு.</p></blockquote>
<p>நன்றாக கவனித்தால் இரண்டாம் வரியில்  &#8220;ஆதாரம் இருக்கின்றன&#8221; என்று பன்மையில் எழுதிச்செல்லும் அந்த நுண்ணிய நகையுணர்வு கண்ணில் படும். மொழியை கொண்டாட்டமாக மாற்றும் இந்த அம்சம் தான் புதுமைப்பித்தனில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அதற்கு 10, 15 வருடங்களுக்கு முன்பே பாரதி இதை எழுதி இருக்கிறார்.</p>
<p>சின்ன சங்கரன் கதை கௌண்டபுரம் என்ற ஊரைச்சேர்ந்த சங்கரன் என்ற சிறுவனின் கதை. சங்கரன் மழலைக்கவி. அந்த கால தமிழ்கவிதைகளின் பிரதான பாணியான காமரசம் சொட்டும் பாடல்களை கற்றுத் தேர்ந்து இளம்வயதிலேயே அது போன்ற கவிதைகளை எழுதவும் கற்றவன். ராமசாமிக் கவுண்டர் கவுண்டனூரின் அரசர், ஜமீன்ந்தார், திருமாலின் அவதாரம். இவரது அவைப்புலவர்களில் ஒருவனாக சின்ன சங்கரனும் சேர்கிறான். இவனுக்கும் அவையின் தலைமைப்புலவரின் மகளுக்கும் காதல் ஏற்படுகிறது.  &#8220;<strong>இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடையூறான ஒர் செய்தி வந்துவிட்டது. இவர்களுடைய காதலாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி.</strong>&#8221;   என்ற வரியுடன் கதை முடிவுபெறாமலேயே நின்றுவிடுகிறது சிறுகதை.</p>
<p>அக்கால சிற்றரசர்களின் வெற்று ஆடம்பரங்கள், அவைப் புலவர்களின் உள்ளீடற்ற மொழி ஆகியவற்றின் மீதான பாரதியின் விமர்சனங்கள் எள்ளமும் கிண்டலுமாய் கதை நெடுகிலும் இருக்கிறது. இந்த விமர்சனம் அதன் உச்சியை அடைவது பின்வரும் பத்தியில்&#8230;.</p>
<blockquote><p>இப்படி தெருவில் கண்டவர்களை எல்லாம் மூன்று காசுக்காக புகழ்ந்து பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக் கிழங்கைப் போலிருக்கிறது, மோவாய்க் கட்டையை பார்த்தால் மாதுளம்பழத்தைப் போலிருக்கிறது, கிழவியுடைய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைப்போல் இருக்கிறது என்று திரும்ப திரும்பக் காது புளித்து போகிற வரையில் வர்ணிப்பது. யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாக பந்தம், ரதபந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்பந்தங்களை கட்டி, அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தன் என்று மனோராஜ்யம் செய்துகொள்வது &#8211; இவை தான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில்.</p></blockquote>
<p>பாரதியாரின் கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்த அம்சம் அவற்றின் சரளத்தன்மை. தோன்றலுக்கும் இறுதி வடிவத்திற்கும் இடையே ஏதுமே நிகழவில்லை என்பதைப்போல அமர்ந்திருக்கும் கவிதை வரிகள். இதே சரளத்தன்மையை அவரது கதைகளிலும் காண முடிகிறது. வாக்கியங்களாக மாறாத சிறு சிறு சொற்சேர்க்கைகளின் மூலம் (<strong>குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகரமான உடல்.</strong>) கதையை முன் நகர்த்தும் விதம், தமிழ் உரைநடை தன் மழலைப்பருவத்தில் இருந்த போது எழுதப்பட்ட கதைகள் இவை என்பதையும் மீறி ஒரு தற்காலத்தன்மையை மொழிக்கு அளிக்கிறது.</p>
<p>பாரதியார் சின்ன சங்கரன் கதையை ஒரு நாவலாகவோ அல்லது ஒரு பெருங்கதையாகவோ எழுதவே நினைத்தார் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் ஒரு தனி நூலாகவேணும் இதை வெளியிட நினைத்திருந்தார் என்பது இக்கதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் இருந்து தெரிகிறது. இப்பொழுதும் கூட ஒரு நல்ல சிறுகதையாக படிக்கலாம் இதை.</p>
<p>இப்போது பொதுபுத்தியில் உரைந்திருக்கும் முண்டாசு அனிந்து கொண்டு விரைப்பான தோரணையுடன் ரௌத்திரம் பழகிக்கொண்டிருக்கும் அந்த ஒற்றைப்பரிமாண பாரதியை துரத்த பாரதியார் கதைகளை இலவசமாக வினியோகிக்கலாம்.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/229/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/229/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/229/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/229/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/229/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/229/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/229/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/229/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/229/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/229/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=229&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/08/05/barathy_stories/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒளியை நோக்கி &#8211; சீனக்கவிதை</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/07/28/towardlight/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/07/28/towardlight/#comments</comments>
		<pubDate>Tue, 28 Jul 2009 05:37:17 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[அயல் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கடந்து சென்ற கவிதை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=221</guid>
		<description><![CDATA[ஒளியை நோக்கி
- யோ ஃபெங் (சீனா)
விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு
இனி இருள்
யாரது, விட்டில் பூச்சியை தடுத்து
இருளில் வசிக்கப் பழக்குவது?
முடிவற்ற பயிற்சிக்குப் பின்
அதன் சிறகுகள் முறிகின்றன
பறக்கவியலாது
அந்தியை இழுத்தபடி
நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது
ஒளியை நோக்கி
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சித்தார்த்.
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=221&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>ஒளியை நோக்கி</strong><br />
- யோ ஃபெங் (சீனா)<br />
விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு<br />
இனி இருள்<br />
யாரது, விட்டில் பூச்சியை தடுத்து<br />
இருளில் வசிக்கப் பழக்குவது?</p>
<p>முடிவற்ற பயிற்சிக்குப் பின்<br />
அதன் சிறகுகள் முறிகின்றன<br />
பறக்கவியலாது<br />
அந்தியை இழுத்தபடி<br />
நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது<br />
ஒளியை நோக்கி</p>
<p><a href="http://china.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14692" target="_blank">ஆங்கிலத்திலிருந்து</a> தமிழில் : சித்தார்த்.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/221/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/221/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/221/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/221/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/221/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/221/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/221/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/221/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/221/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/221/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=221&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/07/28/towardlight/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கிளிகள் &#8211; ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/07/27/parakeets/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/07/27/parakeets/#comments</comments>
		<pubDate>Mon, 27 Jul 2009 06:24:18 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[அயல் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=214</guid>
		<description><![CDATA[கிளிகள்
 &#8211; ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ.
நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.
இருட்டத்துவங்கியதும்
குரல் தாழ்த்தி
தம் நிழலுடனும்
மௌனத்துடனும்
உரையாடுகின்றன.
கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
நாளெல்லாம் பேச்சு
இரவினில் துர்கனவுகள்.
அறிவார்ந்த முகத்தினில்
தங்க வளையங்களும்
அட்டகாசமான இறகுகளும்
இதயத்துள் ஓயாத பேச்சும்&#8230;.
கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
சிறப்பாய் பேசுபவை
தனி கூடுகளில்.
ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=214&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>கிளிகள்</strong><br />
<strong><em> &#8211; ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ.</em></strong></p>
<p>நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.<img class="alignright size-full wp-image-215" title="Parakeet" src="http://angumingum.files.wordpress.com/2009/07/sb10063920f-001.jpg?w=337&#038;h=506" alt="Parakeet" width="337" height="506" /><br />
இருட்டத்துவங்கியதும்<br />
குரல் தாழ்த்தி<br />
தம் நிழலுடனும்<br />
மௌனத்துடனும்<br />
உரையாடுகின்றன.</p>
<p>கிளிகளும்<br />
அனைவரையும் போலத்தான்.<br />
நாளெல்லாம் பேச்சு<br />
இரவினில் துர்கனவுகள்.</p>
<p>அறிவார்ந்த முகத்தினில்<br />
தங்க வளையங்களும்<br />
அட்டகாசமான இறகுகளும்<br />
இதயத்துள் ஓயாத பேச்சும்&#8230;.</p>
<p>கிளிகளும்<br />
அனைவரையும் போலத்தான்.<br />
சிறப்பாய் பேசுபவை<br />
தனி கூடுகளில்.</p>
<p><a href="http://www.poets.org/viewmedia.php/prmMID/20398" target="_blank">ஆங்கிலம் </a>வழி தமிழில் : சித்தார்த்</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/214/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/214/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/214/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=214&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/07/27/parakeets/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2009/07/sb10063920f-001.jpg" medium="image">
			<media:title type="html">Parakeet</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பயமறியா ஜான் &#8211; இடாலோ கால்வினோ</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/07/19/fearless_john/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/07/19/fearless_john/#comments</comments>
		<pubDate>Sun, 19 Jul 2009 19:19:55 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[அயல் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=208</guid>
		<description><![CDATA[இடாலோ கால்வினோ இத்தாலிய இலக்கியவாதி. Invisible Cities, If on a winter&#8217;s night a traveller போன்ற நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். Invisible Cities, தொலைந்த புலப்படாத நகரங்கள் என்ற பெயரில் (ச. தேவதாஸ் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தமிழில் வந்துள்ளது. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாது இத்தாலிய நாடோடிக்கதைகளை சேகரித்து தொகுத்து வெளியிட்டவரும் ஆவார். 1956ல் இவர் வெளியிட்ட Italian Folktales என்ற நூல் வாசிக்க கிடைத்தது. ஆங்கில நாடோடிக் கதைகளை க்ரிம் சகோதரர்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=208&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div class="wp-caption alignnone" style="width: 246px"><img title="இடாலோ கால்வினோ" src="http://gamingreverie.com/wp-content/uploads/2008/08/calvino.jpg" alt="இடாலோ கால்வினோ" width="236" height="344" /><p class="wp-caption-text">இடாலோ கால்வினோ</p></div>
<p>இடாலோ கால்வினோ இத்தாலிய இலக்கியவாதி. Invisible Cities, If on a winter&#8217;s night a traveller போன்ற நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். Invisible Cities, <span style="text-decoration:line-through;">தொலைந்த</span> புலப்படாத நகரங்கள் என்ற பெயரில் (ச. தேவதாஸ் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தமிழில் வந்துள்ளது. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாது இத்தாலிய நாடோடிக்கதைகளை சேகரித்து தொகுத்து வெளியிட்டவரும் ஆவார். 1956ல் இவர் வெளியிட்ட Italian Folktales என்ற நூல் வாசிக்க கிடைத்தது. ஆங்கில நாடோடிக் கதைகளை க்ரிம் சகோதரர்கள் தொகுத்தது போல இத்தாலியில் செய்யப்படவில்லை. இக்கதைகள் தொலைந்துபோய் விடக்கூடாது என்ற முனைப்புடன் தான் இக்கதைகளை தொகுத்ததாக இதன் முன்னுரையில் கூறுகிறார். எனக்கு மாயக்கதைகள் என்றால் கொள்ளை இஷ்டம். நார்நியா, ஹாரி பாட்டர் தொடங்கி ஆர்டிமஸ் ஃபௌல் வரை எதையும் விடுவதில்லை.  பாடும் காக்காய்கள் பேசும் நரிகள் பேராசை பிடித்த ஆமைகள் வஞ்சக பாம்புகள் அன்பான சற்றே சற்று கர்வமுடைய முயல்கள் வாழும் மாய உலகிலிருந்தே கதை சொல்லுதல் நமக்கு அறிமுகமாகின்றன என்பதனாலேயே மாயக்கதைகளிலிருந்து நம்மை நம்மால் பிரித்துக்கொள்ள முடியவில்லை என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் அது மாயக்கதைகள் வாசித்தலுக்கு எதிரான செயலாக இருக்கும் என்பதனால், பேச்சை நிறுத்திவிட்டு, இத்தொகுப்பிலிருந்து ஒரு கதையை மொழிபெயர்த்து இங்கு இடுகிறேன்.</p>
<p><span style="text-decoration:underline;"><strong> </strong></span></p>
<div class="wp-caption alignright" style="width: 229px"><span style="text-decoration:underline;"><strong></strong><strong><img class="  " title="italianfolktales" src="http://www.fantasticfiction.co.uk/images/c0/c989.jpg" alt="இத்தாலிய நாடோடிக்கதைகள்" width="219" height="333" /></strong></span><p class="wp-caption-text">இத்தாலிய நாடோடிக்கதைகள்</p></div>
<p><strong> </strong></p>
<p><span style="text-decoration:underline;"><strong><br />
பயமறியா ஜான்.  &#8211; இடாலோ கால்வினோ</strong></span></p>
<p>(தமிழில் : சித்தார்த்)<br />
முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதை கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்த பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்கு பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய் தங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.</p>
<p>“நான் எதற்கு அஞ்ச வேண்டும்?”</p>
<p>“மக்கள் அந்த மாளிகையை பற்றி நினைக்க கூட அஞ்சுவர். அங்கு போன எவருமே உயிருடன் திரும்பியதில்லை. காலையில் தேவாலைய ஊழியர்கள் சென்று இரவு அங்கே தங்கச்சென்றவர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்”</p>
<p>என்ன செய்தான் ஜான்? வேறென்ன, கையில் ஒரு விளக்கு, வைன் புட்டி, கொஞ்சம் கோழி இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நேராக மாளிகை நோக்கி நடந்தான்.</p>
<p>நள்ளிரவில், மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து அந்த குரல் கேட்டது.</p>
<p>“அதை கீழே போடட்டுமா?”</p>
<p>“ம்ம். போடு” என்றான் ஜான்.</p>
<p>உடனே, புகைகூண்டு வழியாக ஒரு மனிதனின் கால் மட்டும் வந்து விழுந்தது.</p>
<p>“அதை கீழே போடட்டுமா?”</p>
<p>”ம்ம். போடு”</p>
<p>இன்னொரு காலும் விழுந்தது. கோழி இறைச்சியை கொஞ்சம் கடித்துக்கொண்டான் ஜான்.</p>
<p>“அதை கீழே போடட்டுமா?”</p>
<p>”ம்ம். போடு” ஒரு கை வந்து விழுந்தது. ஜான் ஒரு ராகத்தை சீட்டி அடிக்கத்தொடங்கினான்.</p>
<p>“அதை கீழே போடட்டுமா?”</p>
<p>”தாராளமாக.” இன்னொரு கை விழுந்தது.</p>
<p>“அதை கீழே போடட்டுமா?”</p>
<p>”ம்ம்.”. ஒரு மனிதனின் உடல் மட்டும் கீழே விழுந்தது. கைகளும் கால்களும் அதனுடன் ஒட்டிக்கொள்ள தலையற்ற மனிதன் அங்கே நின்றுகொண்டிருந்தான்.</p>
<p>“அதை கீழே போடட்டுமா?”</p>
<p>”ம்ம். போடு”</p>
<p>கீழே விழுந்த தலை நேராக உடலில் போய் ஒட்டிக்கொண்டது. அந்த உருவம் ஒரு பூதமே தான். ஜான் தன் கோப்பையை அதன் திசையில் உயர்த்தி, “உனது ஆரோக்கியத்திகாக” என்றான்.</p>
<p>“விளக்கை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றது பூதம்.</p>
<p>ஜான் விளக்கை எடுத்துக்கொண்டான். ஆனால் நகரவில்லை.</p>
<p>”நீ முதலில் நட” என்றது பூதம்.</p>
<p>“ம்ஹும். உன் பின்னால் வருகிறேன்” என்றான் ஜான்.</p>
<p>“முதலில் நீ” என்று உறுமியது பூதம்.</p>
<p>”நீ முன்னால் போ” என்று கத்தினான் ஜான்.</p>
<p>பூதம் முன்னால் நடக்க விளக்கை எந்தியபடியே ஜான் பின் தொடர, அவர்கள் ஒவ்வொரு அறையாக கடந்து கடந்து இறுதியில் ஒரு படிக்கட்டுக்கு கீழே இருந்த சிறிய கதவை அடைந்தனர்.</p>
<p>“அதை திற” உத்தரவிட்டது பூதம்.</p>
<p>“நீ திற” என்றான் ஜான்.</p>
<p>பூதம் தன் தோளால் முட்டி அக்கதவை திறந்தது. உள்ளே சுழற்படிக்கட்டுகள் தெரிந்தன.</p>
<p>“கீழே போ” என்றது பூதம்.</p>
<p>“உன் பின்னால்” என்றான் ஜான்.</p>
<p>அவர்கள் கீழே செல்ல அங்கே ஒரு சிறிய அறை இருந்தது. தரையில் கிடந்த ஒரு கல் பலகையை சுட்டி “அதை தூக்கு” என்றது பூதம்.</p>
<p>”நீ தூக்கு” என்றாரன் ஜான். பூதம் அதை ஒரு கூழாங்கல்லை தூக்குவதை போல எளிதாய் தூக்கி போட்டது.</p>
<p>கல்லின் கீழே தங்கக்காசுகள் நிறைந்த மூன்று குடங்கள் இருந்தன.</p>
<p>“அவற்றை மேலே தூக்கிச்செல்” என்று உத்தரவிட்டது பூதம்.</p>
<p>“நீ தூக்கிச்செல்” என்றான் ஜான். பூதம் ஒவ்வொன்றாக மேலே தூக்கிச்சென்றது.</p>
<p>அவர்கள் மீண்டும் மாளிகையின் கூடத்தை அடைந்த போது பூதம் கூறியது, “ஜான், சாபம் நீங்கிவிட்டது!”, இதை கூறியதும் அதன் ஒரு கால் மட்டும் தனியாய் பிரிந்து புகை கூண்டின் வழியே மேலேறியது.</p>
<p>”இதில் ஒரு பானை தங்கம் உனக்கானது. ” ஒரு கை பிரிந்து மேலேறியது. ”இரண்டாவது பானை, நீ இறந்துவிட்டாய் என்று நினைத்து உன் உடலை தூக்கிச்செல்ல காலையில் வருவார்களே, அந்த தேவாலைய ஊழியர்களுக்கு.” இன்னொரு கையும் பிரிந்து முதல் கையை தொடர்ந்து சென்றது. “மூன்றாவது பானை, உனை காண வரும் முதல் ஏழைக்கானது.” இன்னொரு காலும் பிரிய, பூதம் தரையில் கிடந்தது. ”இந்த மாளிகையை நீயே வைத்துக்கொள்”. தலையை பிரிந்த உடல் மேலேறிச்சென்றது. “இம்மாளிகையின் உரிமையாளர்களும் அவர்களது குழந்தைகளும் இனி திரும்பப்போவதில்லை”. இதை கூறியதும் தலையும் புகைக்கூண்டின் வழியே மறைந்துவிட்டது.</p>
<p>விடிந்த போது அந்த ஒலி எழுந்தது, “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்.”. இறந்த உடலை தூக்கிச்செல்ல தேவாலைய ஊழியர்கள் வந்திருந்தனர். அவனோ சன்னலருகே நின்றபடி புகைபிடித்துக்கொண்டிருந்தான்!</p>
<p>பயமறியா ஜான் அந்த தங்கங்களினால் செல்வந்தனாகி அந்த மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். பின்னொரு நாள் பின்னால் திரும்பி தனது நிழலை பார்த்தான். பயத்தில் அந்த இடத்திலேயே அவனது உயிர் பிரிந்தது.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/208/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=208&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/07/19/fearless_john/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>

		<media:content url="http://gamingreverie.com/wp-content/uploads/2008/08/calvino.jpg" medium="image">
			<media:title type="html">இடாலோ கால்வினோ</media:title>
		</media:content>

		<media:content url="http://www.fantasticfiction.co.uk/images/c0/c989.jpg" medium="image">
			<media:title type="html">italianfolktales</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பேசுதல் அதற்கின்பம் &#8211; நூல் வரலாறு</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/06/30/collage_story/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/06/30/collage_story/#comments</comments>
		<pubDate>Tue, 30 Jun 2009 14:19:17 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=203</guid>
		<description><![CDATA[தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும்.  அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த கலவை இலக்கியம்(1) என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது.
இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=203&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும்.  அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த <em>கலவை இலக்கியம்(1)</em> என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது.</p>
<p>இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் செலுத்திய தாக்கத்தினை குறித்து இந்த சிறு கட்டுரையில் ஆராய விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக இந்நூலினை குறித்து பேசுவோம். 2035ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் வெளியானது. சங்க இலக்கிய பாடல்களில் இருந்து துணுக்குகளை அடுக்கி அடுக்கி செய்யப்பட்ட ஆக்கம் இந்த நூல். குறுந்தொகை தலைவி ஒருத்தியின் கேள்விக்கு நெடுநல்வாடையின் தலைவன் பதிலளிப்பான். அவனது பதிலை புறநானூற்று ஔவை மறுப்பாள். இந்த வடிவத்தில் 40 அத்தியாயங்களில் (ஒவ்வொரு அத்தியாயமும் ஓர் உணர்வை முன்வைக்கிறது) எழுதப்பட்ட நூல் இது. நூலின் முன்னுரையில் முத்தையன் கூறுகிறார் -</p>
<blockquote><p>“என் இளமை பிராயம் முதல், சங்க இலக்கிய பாடல்கள் என்னுடன் உரையாடுவதாகவே எனக்கு தோன்றும். ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் பாணனும் பாணினியும் தோழனும் தோழியும் செவிலித்தாயும் தலைவனும் தலைவியும் என்னை நோக்கி ஏதோ சொல்வதாய்ப் படும். மனதினுள் நானும் அவர்களுடன் உரையாடுவேன். திடீரென ஒரு நாள் தோன்றியது, இந்த பாடல்கள், அதன் மாந்தர்கள், அதன் பருவநிலைகள், விலங்குகள், விழாக்கள் என யாவும் தத்தமக்குள் உரையாடினால் என்ன ஆகும்? இந்த எண்ணம் உதித்ததும், பாடலின் வரிக்கட்டுக்களை மீறி வெளியேற துடிக்கும் சிறைகைதிகளாக மாறிவிட்டனர் பாடலில் குடிகொண்ட அனைவரும். அவர்களை விடுவிக்கும் முயற்சியே இது.”</p></blockquote>
<p>இன்று, வடிவ ரீதியிலும் <em>வாசகப்பங்கேற்பு விகிதத்திலும் (2)</em> (reader participation ratio) பின் தங்கிய படைப்பாக இந்நூல் பார்க்கப்படுகிறது. எனினும், இரண்டு விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, கலவை இலக்கியம் அதன் வடிவ நேர்த்தியை கண்டடையும் முன்பே வெளிவந்த படைப்பு இது. உதாரணமாக பிற்கால கலவைக்கட்டுரைகளின் உரைகல்லாய் திகழ்ந்த வாசக பங்கேற்பு விகிதம் போன்ற கருத்தாக்கங்கள் இந்நூல் உருவான காலத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இரண்டாவதாக, இன்று மரபணு வரலாற்றியல் என்னும் அறிவியல் துறையின் வளர்ச்சியினால், நாம் ஆயிரக்கணக்கான சங்ககால பாடல்களை மீட்டெடுத்துள்ளோம். ஆனால், இந்த நூல் எழுதப்பட்ட பொழுது சங்க இலக்கிய பாடல்கள் என்று வெறும் 2700 பாடல்களையே கூறிவந்தார்கள். இந்த 2700 பாடல்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு இன்றைய எந்த கலவை இலக்கிய படைப்பினோடும் ஒப்பிடக்கூடியதே என்பது எனது துணிபு.</p>
<p>முதன்முதலில் வெளியிடப்பட்ட போது இதை எந்த வகைமைக்குள் அடைப்பது என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கிய சமூகம் இந்நூலினை மிக மௌனமாகவே முதலில் எதிர்கொண்டது என கணிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. 2035ல் வெளிவந்த நூலினை பற்றிய குறிப்பிடும்படியாக எழுதப்பட்ட முதல் கட்டுரை, மரவன்புலவு எழுதிய “பேசுதல் அதற்கின்பம் &#8211; வெட்டி ஒட்டுதல் கலை ஆகுமா?”. இது 2040ல் வெளியானது. ஐந்தாண்டு கால மௌனம். கட்டுரையில் நூலினை, அதன் அடிப்படையை மிக உக்கிரமாக நிராகரிக்கிறார் மரவன்புலவு. ஆனால் இந்நூலின் கலைமதிப்பு, அழகியல் ஆகியவை பெருவாரியான வாசகர்களை ஈர்த்தன என்பதை இக்கட்டுரைக்கு வந்த மறுப்புரைகள் காட்டுகின்றன. நோபல் பரிசு பெற்ற புனைவாளரான மிலோராட் பாவிச்சின் நாவல்களில் இருந்து உருவாக்கப்பட்ட &#8220;Tea with the Khazars&#8221; என்ற ஆங்கில கலவை நாவலை அமெரிக்க தமிழர் செந்தூரன் 2041ல் வெளியிட்டார். கலவை இலக்கியம் (Collage Literature) என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது இவரே. இந்நூல் ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் கிட்டத்தட்ட 20 குறிப்பிடத்தக்க கலவை இலக்கிய நூல்கள் வெளியாயின. 2042ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை Conversations across bariers (பெரும்பாலும், ஏ.கே. ராமானுஜனின் சங்கபாடல்களின் ஆங்கில மொழிப்பெயர்புகள் பயன்படுத்தப்பட்டன) என்ற பெயரில் வெளியிட்டார். இன்று உலக இலக்கிய சூழலில் தமிழ் மிக முக்கியமான இடத்தினை பெற்றிருப்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு ஒரு பெரும் காரணமாகும். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து பல தமிழ் நாவல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 2060ல் செந்தூரனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது நிகழ்த்திய உரையில் முத்தையனை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.</p>
<p>தமிழ் சமூக வரலாற்றில் இந்நூலின் தாக்கத்தை குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகம் தனி நாடாக உருவானது தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இந்நிகழ்வின் சமூக தாக்கங்கள் குறித்த பல்வேறு முக்கியமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்நோக்கில், தனி நாடு பிரகடனத்திற்கும், பேசுதல் அதற்கின்பம் நூல் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பும் ஆய்வுக்குரியதே.</p>
<p>இத்தனை வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நூல் கடந்த 40 ஆண்டு காலமாக புழக்கத்தில் இல்லை. நாம் எந்த அளவிற்கு வரலாற்றுப்பிரக்ஞையற்று இருக்கின்றோம் என்பதற்கான சான்று இது. இதை வெளியிட்டதன் மூலம் தமிழேறு பதிப்பகம் தமிழ் சமூகத்திற்கு ஓர் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது.  அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.</p>
<p>- வெ. சித்தார்த் (அங்கிங்கெனாதபடி, ஜூன் 30, 2182).</p>
<p><em><strong> பின்னிணைப்புகள் : </strong></em></p>
<p>(1) <strong>கலவை இலக்கியம் </strong>என்பது பல்வேறு மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களை கலப்பதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். கலவை இலக்கியத்தின் மிக முக்கிய அம்சம், அதன் ஆசிரியர் தனது சொற்களை படைப்புக்குள் புகுத்தாதிருப்பதே. சொல்ல வந்த அனைத்தையும் பல்வேறு ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களின் மூலம் மட்டுமே சொல்ல வேண்டும்.</p>
<p>கலவை இலக்கியம் என்ற பொதுப்பகுப்பினுள் கலவை கட்டுரை, கலவை சிறுகதை, கலை புதினம், கலவை கவிதை என பல்வேறு விதமான இலக்கியப் படைப்புகள் உருவாகியுள்ளன. ஒரு கலவை காப்பியம் கூட எழுதப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள &#8220;A Brief introduction to Collage Literature&#8221; கலவை இலக்கியம் பற்றிய சிறந்த அறிமுக நூல்.</p>
<p>(2) &#8211; <strong>வாசகப்பங்கேற்பு விகிதம் [வா.ப.வி] (Reader Participation Ratio [RPR])</strong> : படைப்பு என்பது படைப்பாளியும் வாசகனும் இணையும் போதே உருவாகிறது என்ற வாதத்தின் நீட்சியாக உருவான அளவீடு, வாசக பங்கேர்ப்பு விகிதம். ஒரு படைப்பின் புரிதலுக்கு வாசக ஈடுபாடு எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதை குறிக்கும் அளவீடு இது. இந்த விகிதத்தின் துணைகொண்டே புத்தகங்களின் வாசகபரப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில், வா.ப.வி யை அளவிட சொற்பரிச்சயம், கருத்துப்பரிச்சயம், சராசரி வாக்கிய நீளம் போன்ற பல்வேறு அளப்பான்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றைய வா.ப.வி அதன் ஆதி வடிவில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டது.</p>
<p>(3) &#8211; <strong>மரபணு வரலாற்றியல்</strong> : 21ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுவது மரபணு வரலாற்றியல். 2083யில் மு. குழந்தைவேலு மற்றும் இவானிச் இளியோர் கூட்டாக வெளியிட்ட நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சிக்கட்டுரை  இத்துறையின் தொடக்கப்புள்ளி எனலாம். ஒவ்வொரு மனிதனின் மரபணுக்குள்ளும் அம்மனிதனின் மூதாதையர்கள் குறித்த தகவல்கள் பொதிந்துள்ளன என்று நிறுவி அதை பிரித்தெடுக்கும் வழிகளை கோட்பாட்டளவில் அளித்தது இக்கட்டுரை. இதன் துணை கொண்டு மனித வரலாறு குறித்த தகவல்களை மனித மரபணுக்களில் இருந்து தேடத்துவங்கினார்கள். மொழியியல் , குறியீட்டியல் , நரம்பியல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சியின் விளைவாக இந்த மரபணு தகவல்கள் மொழிவடிவமாக மாற்றப்பட்டன. இத்துறையின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான மு. குழந்தைவேலு  பழந்தமிழ் இலக்கியத்தினை மீட்டெடுக்கும் பணியின் ஈடுபடலானார். மதுரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மரபணுவில் இருந்து கபிலரின் பாடல் ஒன்றினை குழந்தைவேலு 2098ல் மீட்டெடுத்தார்.  இவர் உருவாக்கிய “தமிழிலக்கிய மீட்புக்கழகம்” கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 50,000 பாடல்களை மீட்டெடுத்துள்ளது. இவற்றுள் 8539 பாடல்கள் சங்க இலக்கிய காலகட்டத்தை சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளன.</p>
<p>(உரையாடல் சிறுகதை போட்டிக்கான கதை).</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/203/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/203/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/203/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/203/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/203/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/203/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/203/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/203/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/203/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/203/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=203&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/06/30/collage_story/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உயரத்திருந்து யாசித்தல்</title>
		<link>http://angumingum.wordpress.com/2009/03/10/poverty_lit/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2009/03/10/poverty_lit/#comments</comments>
		<pubDate>Tue, 10 Mar 2009 10:14:30 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கடந்து சென்ற கவிதை]]></category>
		<category><![CDATA[பழந்தமிழ் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[புறநானூறு]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=200</guid>
		<description><![CDATA[பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 &#8211; 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு &#8220;அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,&#8221; என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=200&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 &#8211; 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு &#8220;அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,&#8221; என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த பாடல் சட்டென வேறோர் தளத்திற்கு தாவி விடுகிறது. இதுவும் ஒரு யாசகப்பாடல் தான். ஆனால் தட்டையான, &#8220;எனக்கு ஏதாவது தா&#8221; என்ற தொனி இல்லை இப்பாடலில்.</p>
<p>புறம் 159 :</p>
<blockquote><p>`வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்,<br />
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,<br />
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,<br />
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,<br />
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;</p>
<p>பசந்த மேனியொடு படர்அட வருந்தி,<br />
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்<br />
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,<br />
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த<br />
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,<br />
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,<br />
அவிழ்ப்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,<br />
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,<br />
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;</p>
<p>என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்</p>
<p>கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.<br />
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,<br />
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்<br />
கருவி வானம் தலைஇ யாங்கும்,<br />
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,<br />
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-</p>
<p>உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,<br />
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ<br />
இன்புற விடுதி யாயின், சிறிது<br />
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!<br />
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்<br />
வசையில் விழுத்திணைப் பிறந்த<br />
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.</p></blockquote>
<p>&#8220;என் வாழ்நாளைக் கடந்தும் பல ஆண்டுகள் உயிரோடிருக்கிறேன். இன்னும் என் உயிர் பிரியவில்லையே&#8221; என புலம்புகிறாள் என் தாய். ஊன்றுகோலை காலாக கொண்டு சிறு சிறு அடிகளாக நடக்கிறாள். நூலை விரித்தாற்போன்ற கூந்தல் அவளுடையது. கண் பார்வை மங்கியதால் முற்றத்திற்கு கூட செல்ல முடியாமல் கிடக்கிறாள்.</p>
<p>பிள்ளைப்பேற்றால் சோர்ந்த உடம்புடன் துயரத்தால் வருந்துபவள் என் மனைவி. இடுப்பில் இருக்கும் குழந்தைகள் பிசைந்து பிசைந்து வாடிய முலைகளுடையவள். குப்பைக்கீரையின் இளந்தளிரினை பறித்து உப்பு இடவும் வழியின்றி நீரையே உலையாக ஏற்றி காய்ச்சி  சமைத்து மோரில்லாமல் உண்கிறாள்.  அழுக்கேறி கிழிந்திருக்கின்றன அவளது உடைகள். இருந்தும் இல்லற வாழ்வை பழிக்காதவள்.</p>
<p>இவர்கள் இருவரும் மகிழ வேண்டும்.</p>
<p>காட்டை எரித்த நிலத்தில் நடப்படும் பயிர் பசுமையாக வளர்ந்து, கோடையில் வாடுகையில், இழும் என்ற முழக்கத்துடன் மழை பொழியும் வானத்தை போல நீ தரும் பொருளால், பசியால் வாடிய என் சுற்றத்தார் உனை பாராட்ட வேண்டும்.</p>
<p>ஆனால் ஒன்று. அழகிய தந்தங்களை உடைய யானையையே எனக்கு பரிசாக தருவதானாலும் அதை அன்போடு தரவில்லையெனில் எனக்கு அது வேண்டாம். உள்ளத்தில் அன்புடன் நீ எனக்கு தரும் பரிசு மிகச்சிறியதானாலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.</p>
<p>கூரிய வேலினைக்கொண்ட குமணனே, உன்னை பாராட்டி பாடிக்கொண்டிருக்கும் நான் பெருமைமிக்க ஓர் குடும்பத்தில் பிறந்தவன்.<br />
பாடலின் முதல் பகுதி முழுவதும் வறுமையின் கொடுஞ்சித்திரம் சிறு சிறு குறிப்புகளின் மூலம் தீட்டப்படுகிறது. மரணத்திற்கான காத்திருப்பு , ஊன்று கோலுடன் சிறுசிறு அடிகளாலான நடை, நிறைய குழந்தைகள்,  பிசைந்து பிசைந்து வாடிய முலைகள், குப்பை கீரையின் சிறிய தளிர்களை உப்பும் மோரும் இன்றி சமைத்தல்&#8230;. பின் மழையுடன் குமணனை ஒப்பிடும் நான்கு வரிகள். இப்பகுதியை எழுதியது பெருஞ்சித்திரனார் என்ற தன் குடும்பத்து வறுமையை ஆற்றாமையுடன் நோக்கிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனாகத்தான் இருக்க வேண்டும். ஈ என இரத்தலின் இழிநிலையில் வாடும் ஒரு பெருங்கவிஞன் இப்பாடலில் கடைசி பகுதியை எழுதுகிறான். ஆம். என் வீட்டில் சோறு கூட இல்லை. கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்கிறோம். அதனால் என்ன?  இசைமேந்தோன்றல் உனை பாடிய யான். கவிஞன். எனக்குறிய கௌரவத்துடன் தா, தரும் பொருளை. அப்படி தருவதானால் சிறு பொருளை தந்தாலும் ஏற்றுக்கொள்வேன். இல்லையா? பெரிய யானையையே கொடுத்தாலும் வேண்டாம்.</p>
<p>வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்கிறான் பாரதி. இசை மேந்தோன்றல் நினை பாடிய யானே என்கிறார் பெருஞ்சித்திரனார். கவிமனத்தின் உயரத்திற்கும் வாழ்வியல் அல்லல்களின் பள்ளத்திற்குமான இடைவெளியே இக்கவிதையின் கூரிய முரணாய் தெரிக்கிறது.</p>
<p>பெருஞ்சித்திரனாரின் கவிதைகளை வாசித்தபோது மு. சுயம்புலிங்கம் நினைவிற்கு வந்தார். இவர் எழுதிய மிக சில கவிதைகளையே படித்திருக்கிறேன். இருப்பினும் வறுமையை குறித்து எழுதும் கவிஞர் என்ற பிம்பம் என்னளவில் இவருக்கு விழுந்துவிட்டது. எப்போதோ படித்த ஒரு கவிதையில் வறுமையில் வாடும் மனைவியை பார்த்தபடியே நின்றிருப்பார். நைந்த புடவை, வாடிய உடல், ஒளியிழந்த கண்கள், நகை அணியாத கழுத்து கை காதுகள். தாலிக்கொடியில் இருக்கும் சிறு தங்க ஊக்கு கண்ணை பறிக்கிறது. கேட்கலாம் தான். கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தும் விடுவாள் தான். ஆனாலும்&#8230;. அறுந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்தபடியே கவிதையை விட்டு வெளியேறுவார் சுயம்புலிங்கம். வறுமையை பார்க்க நேரும் போதும் அது குறித்து படிக்கும் போதும் இந்த காட்சி வந்து மறையும்.</p>
<blockquote><p><strong>தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்</strong></p>
<p>நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்<br />
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை<br />
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்<br />
ஒரு அடி கொடுப்போம்<br />
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்<br />
தீட்டுக்கறை படிந்த<br />
பூ அழிந்த சேலைகள்<br />
பழைய துணிச்சந்தையில்<br />
சகாயமாய் கிடைக்கிறது<br />
இச்சையை தணிக்க<br />
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது<br />
கால் நீட்டி தலைசாய்க்க<br />
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது<br />
திறந்தவெளிக் காற்று<br />
யாருக்கு கிடைக்கும்<br />
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது<br />
எதுவும் கிடைக்காதபோது<br />
களிமண் உருண்டையை வாயில் போட்டு<br />
தண்ணீர் குடிக்கிறோம்<br />
ஜீரணமாகிவிடுகிறது<br />
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை<br />
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.</p>
<p>- மு. சுயம்புலிங்கம்.</p></blockquote>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/200/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/200/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/200/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/200/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/200/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/200/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/200/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/200/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/200/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/200/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=200&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2009/03/10/poverty_lit/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ் சினிமா &#8211; சில கேள்விகள்.</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/10/12/tamilcinema/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/10/12/tamilcinema/#comments</comments>
		<pubDate>Sun, 12 Oct 2008 20:04:13 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[திரைப்படம்]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=197</guid>
		<description><![CDATA[
கொஞ்சம் நாள் தொடர் ஓட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இழுத்து விட்ட ஐகராஸ் பிரகாஷுக்கு நன்றி . இந்த கேள்விகளின் நதிமூலம் ஆராய விரும்புபவர்கள் பிரகாஷின் பதிவை சுட்டவும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில், பார்த்த முதல் படம் எது என்பதெல்லாம் துள்ளியமாக நினைவிலில்லை. மிகச் சிறிய வயதிலேயே என்பது மட்டும் தெரியும். சிறுவயதும் சினிமாவும் என யோசித்தால் சில புகைமூட்டமான நினைவுகள் வருகின்றன. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=197&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="text-align:left;">
<div style="text-align:left;">கொஞ்சம் நாள் தொடர் ஓட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இழுத்து விட்ட ஐகராஸ் பிரகாஷுக்கு நன்றி . இந்த கேள்விகளின் நதிமூலம் ஆராய விரும்புபவர்கள் பிரகாஷின் <a title="Movies, a meme" href="http://icarusprakash.wordpress.com/2008/10/09/movies-a-meme/" target="_blank">பதிவை</a> சுட்டவும்.<br />
<strong><br />
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?</strong></p>
<p>எந்த வயதில், பார்த்த முதல் படம் எது என்பதெல்லாம் துள்ளியமாக நினைவிலில்லை. மிகச் சிறிய வயதிலேயே என்பது மட்டும் தெரியும். சிறுவயதும் சினிமாவும் என யோசித்தால் சில புகைமூட்டமான நினைவுகள் வருகின்றன. அப்போது நாங்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை என அருகருகே வீடு மாற்றிக்கொண்டிருந்ததால் தேவி திரையரங்கு வளாகமும் அங்கு பார்த்த (முப்பரிமான கண்ணாடியோடு) மை டியர் குட்டிச்சாத்தான், கிங் சாலமன்ஸ் மைன்ஸ், ஜாக்கி ஷராஃபின் ஹீரோ நினைவுக்கு வருகின்றன. வீட்டருகே இருந்த பாரகன் தியேட்டரில் பார்த்த பட்டனத்தில் பூதம், அல்லி ராஜ்ஜியம், மாயா பஜார் மற்றும் விட்டலாச்சாரியார் படங்களும். இன்றை போலவே அன்றும் கொண்டாட்டமான படங்களே பிடித்திருந்தன. பூவே பூச்சூடவா நானும் என் தங்கையும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்த படம்.<br />
<strong><br />
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?</strong></p>
<p>நேற்று முன் தினம் பார்த்த ராமன் தேடிய சீதை. படம் எனக்கு பிடித்திருந்தது.</p>
<p><strong>3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?</strong></p>
<p>சென்ற வாரம் வீட்டில் டிவிடியில் பார்த்த சரோஜா. பார்த்ததும் தோன்றியது&#8230; மிக மிக சிறிய படம். கால அளவை மட்டும் சொல்ல வில்லை. களமும் மிகச்சிறியது. நகைச்சுவையை எடுத்துவிட்டால் ஒன்றுமே எஞ்சியிருக்காது படத்தில். படத்தை மிகவும் ரசித்தேன் என்றாலும் எல்லா படங்களும் இப்படியே இருந்தால் Claustrophobicஆக உணர ஆரம்பித்து விடுவோம் என்று படுகிறது. தவமாய் தவமிருந்தேன் போன்ற ஒரு வாழ்கையை முழுவதுமாய் பார்க்கும் படங்களும் நமக்கு தேவை.<br />
<strong><br />
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா</strong></p>
<p>மகாநதி. வறுமையின் நிறம் சிவப்பு. வீடு. தண்ணீர் தண்ணீர்.</p>
<p><strong>5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?</strong></p>
<p>குஷ்பு விவகாரம்.</p>
<p><strong>5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?</strong></p>
<p>அப்பு கமல். தசாவதாரத்தில் கடைசி சண்டை காட்சி. மை டியர் குட்டிச்சாத்தானில் ஐஸ் கிரீம் நீட்டப்படும் இடத்தில் என் கைகள் முன் இருக்கைகாரரின் தலையை தாக்கின. இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் படுகிறது.</p>
<p><strong>6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?</strong></p>
<p>வரலாற்றில் ஆர்வமுண்டு என்பதால் திரைப்படம் குறித்த வரலாற்று தகவல்களை (தியோடர் பாஸ்கரன், ஷாஜியின் கட்டுரைகள் போல) ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. நிழல், கனவுப்பட்டறை போன்ற திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்களும். தவிரவும் வாரஇதழ்களை (குமுதம், விகடன் இத்தியாதிகள்) வாங்கும் யாரும் திரைப்படம் குறித்த செய்திகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை. வீடு தேடி வரும். என்ன&#8230; அது திரைப்படத்தை பற்றி இருக்காது. திரைப்படத்துறையையும் அதை சார்ந்தவர்களையும் குறித்த மீதகவல்களாக (metadata) மட்டுமே இருக்கும்.</p>
<p><strong>7.தமிழ்ச்சினிமா இசை?</strong></p>
<p>இசை எனக்கு அறிமுகமானதே சினிமா மூலமாக தான். ஆங்கில இசை புரிவதில்லை. கொஞ்சம் தள்ளி கிஷோர் குமார், ரஃபி, மகாராஜபுரம் என்று சென்றது கூட வெகு சமீபத்தில் தான். அதற்கு முன்பெல்லாம் இசை என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா தான். சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை ஏ. எம். ராஜா பற்றி <a title="A M Rajah - Song of a Summer Breeze" href="http://shajiwriter.blogspot.com/2008/09/m-rajah-song-of-summer-breeze.html" target="_blank">ஷாஜி</a> எழுதியது.</p>
<p><strong>8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?</strong></p>
<p>இந்திய மொழிப்படங்கள் எனில் மலையாளம் மிக அதிகமாக பார்ப்பதுண்டு (கடைசியாக பார்த்தது ஶ்ரீநிவாஸனின் அரபிகதா). சில வங்க மொழிப்படங்களை பார்த்ததுண்டு. இந்திய அளவில் அவ்வளவு தான். உலக மொழி படங்கள் மீது ஆர்வம் உண்டு. பருவத்திற்கு ஏற்ப பார்க்கும் மொழிகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரிய மற்றும் ஜப்பானிய படங்கள்.</p>
<p>அதிகம் தாக்கிய படங்கள் :</p>
<p>வாழ்வு அழிவை நோக்கி செல்லும் பயணம் என்ற பிம்பத்தை மிக அழுத்தமாக விதைத்ததற்காக -  ஷேம் (ஸ்வீடன் &#8211; இங்க்மார் பெர்க்மன்).  டர்டில்ஸ் கேன் ஃப்ளை (குர்த் &#8211; இரான் பஃமான் கோபாதி). ரான் (ஜப்பான் &#8211; அகிரா)</p>
<p>வாழ்வின் உன்னதம் என்று ஒன்றை காட்டியதற்காக &#8211; ரெட் பியர்ட், இகிரு (ஜப்பான் &#8211; அகிரா). சில்றன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் (ஈரான் &#8211; மஜித் மஜீதீ), அபுர் சன்சார் (வங்கம் &#8211; சத்யஜித் ரே).</p>
<p><strong>9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?</strong></p>
<p>மதுரைக்கு விமானத்தில் சென்ற போது எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி கஞ்சா கருப்பு பயணம் செய்தார். இது தான் சினிமாவுடனான எனது நேரடி தொடர்பு. ஒன்றும் செய்யவில்லை. அதுவாக நிகழ்தால் தடுக்க மாட்டேன். பட்டாம்பூச்சி சிறகசைத்தால் புயல் வருமாம். எனில் இதனாலும் ஏதேனும் நிகழாமல் போகுமா என்ன?</p>
<p><strong>10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?</strong></p>
<p>மிக மிக நன்றாக இருப்பதாக. இந்த தலைமுறை தமிழகத்திற்கும் சென்ற தலைமுறை தமிழகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது என்பது கண்கூடு. கண்ணாடிக்குவளையின் மீது விஷம் என ஸ்கெட்ச் பேனாவினால் எழுதி ஒட்டி அதில் காமிராவை சூம் செய்யும் சேட்டையெல்லாம் நடந்திருக்கிறது நம் தமிழ் சினிமாவில் என்று யோசித்தால் இப்போது எவ்வளவு முன் நகர்திருக்கிறோம் என்று தெரிகிறது. கடந்த 2 &#8211; 3 ஆண்டுகளுக்குள் வந்துள்ள நல்ல படங்களின் விகிதம் தமிழ் சினிமாவிற்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை சுட்டுகிறது. (அதாவது ஏ.வி.எம் மீண்டும் ஒரு பெரிய பட்ஜட் மசாலா படம் ஒன்றை தயாரிக்காதிருந்தால்&#8230;)</p>
<p><strong>11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?</strong></p>
<p>ஒரு வேளை நிகழ்ந்துவிட்டால்&#8230; என்று வைத்துக்கொள்வோம். தோனிக்கு கட் அவுட் வைத்து பால்/பீர்/காசு/துண்டு காகித அபிஷேகம், இளைய சிங்கம் பத்ரிநாத் நற்பணி மன்றம்&#8230;.. நிகழலாம். சினிமா வேறு ஏதோ ஒன்றிற்கான வடிகால் என்று தான் தோன்றுகிறது. இது இல்லையென்றால் வேறு ஒன்று. தமிழர்களுக்கு எந்த அளவிற்கு மாறுதல் வரும் என்று தெரியவில்லை. மீண்டும் 7 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு ஊர்கதை பேசும் குடும்பத்தலைவர்கள், ஓடிப்பிடிச்சி, கண்ணாம்மூச்சி ஆடும் பொடிசுகள் உருவாகலாம். (பெண்களை நெடுந்தொடர்களிலிருந்து பெயர்த்தெடுத்தல் நிகழும் என படவில்லை).</p>
<p>நான் அழைக்கும் நால்வர் :</p>
<p><a href="http://arasanagari.blogspot.com/" target="_blank">முபாரக்</a><br />
<a href="http://manjoorraja.blogspot.com/" target="_blank">மஞ்சூர் ராசா</a><br />
<a href="ayyanaarv.blogspot.com" target="_blank">அய்யனார்</a><br />
<a href="asifmeeran.blogspot.com" target="_blank">ஆசிப் </a><br />
<a href="http://iruppu.blogspot.com/" target="_blank">லக்ஷ்மன் ராஜா</a></div>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/197/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=197&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/10/12/tamilcinema/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>செங்களம் படக் கொன்று&#8230;.</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/09/28/bloodypost/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/09/28/bloodypost/#comments</comments>
		<pubDate>Sat, 27 Sep 2008 21:37:14 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[பழந்தமிழ் இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=195</guid>
		<description><![CDATA[தேவர்மகன் படம் பார்த்த ஒரு வாரத்திற்கு அந்த நடுக்கம் இருந்தது. எனது வழமையான ”குருதி காண் அச்சம்” மட்டுமல்ல அது. சக்தியும் மாயனும் தத்தம் கைகளில் வாளுடன் நிற்கின்றனர். மாயனின் வாளை தடுக்க மட்டுமே எத்தனித்த சக்தியின் கை நழுவ&#8230; கீழே உருண்டோடுகிறது மாயனின் தலை. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இக்காட்சி. “தலை உருளுதலுக்கு” எத்தனை அருகில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமே மயிர்கூச்செரிய செய்தது. எத்தனை முறை கையில் சிறு கத்தியுடன் விளையாடி இருப்பேன் தங்கையிடம்? [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=195&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தேவர்மகன் படம் பார்த்த ஒரு வாரத்திற்கு அந்த நடுக்கம் இருந்தது. எனது வழமையான ”குருதி காண் அச்சம்” மட்டுமல்ல அது. சக்தியும் மாயனும் தத்தம் கைகளில் வாளுடன் நிற்கின்றனர். மாயனின் வாளை தடுக்க மட்டுமே எத்தனித்த சக்தியின் கை நழுவ&#8230; கீழே உருண்டோடுகிறது மாயனின் தலை. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இக்காட்சி. “தலை உருளுதலுக்கு” எத்தனை அருகில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமே மயிர்கூச்செரிய செய்தது. எத்தனை முறை கையில் சிறு கத்தியுடன் விளையாடி இருப்பேன் தங்கையிடம்? எத்தனை முறை கோலுடன் “கத்திச்சண்டை” போட்டிருப்பேன் தோழர்களிடம். கை நரம்பு கிழிபட்டு உதிரம் வழிவதும் கோல் கை தவறி கண் பறிப்பதும் எதேச்சையாய் நிகழாது போன சாத்தியங்கள் மட்டுமே. கை தொடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் கொலை சாத்தியத்தை குறித்த அச்சத்தை தேவர் மகன் என்னுள் விளைவித்தது. கமல் பின்பொருமுறை ஒரு பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார் &#8211; ”வன்முறைப் படங்களில் இரு வகை உண்டு. தேவர் மகன் பார்த்தபின் வன்முறையை குறித்த அச்சம் மட்டுமே மிஞ்சும். ஜாக்கி ஜான் படம் பார்த்துவிட்டு வருகையில் யாரையாவது அடிக்கவென தினவெடுத்து நிற்கும் கைகளும் கால்களும்.”</p>
<p>பொதுவாகவே உதிரம் வழிந்தோடும் வன்முறை சார்ந்த படங்களை தவிர்த்துவிடுவேன். எது சாலை விபத்தை கண்டால் என்னை தலையை வேறுபுறம் திருப்ப உந்துகிறதோ அது தான் இப்படங்களையும் காணவிடாது செய்கிறது. ஆனால் ”கில் பில்”(Kill Bill) வேறு ஒரு அனுபவம். படம் முழுக்க குருதி வழிந்தோடுகிறது. கதை என்று என்ன இருக்கிறது அதில்? பில் என்ற ஒரு கொலைக்கூட்ட தலைவன் தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்று ”சராசரி” வாழ்வை வாழ எத்தனித்த அவளை, தன் கூட்டத்துடன் சென்று அவளது திருமணத்தன்று சுட்டு வீழ்த்துகிறான். கணவனும் 4 உறவினர்களும் அங்கேயே இறக்க, இவள் 7 வருட கோமா நிலையில்&#8230; விழித்தெழுந்ததும் பில்லை கொல்ல விழைகிறாள். எப்படி என்பதை இரண்டு படங்களாக தந்தார் டரண்டினோ. படம் முழுக்க தலைகள் உருள்கின்றன, கைகள் துண்டாகின்றன, சிரமிழந்த கழுத்திலிருந்தும் கரமிழந்த தோளிலிருந்தும் உதிரம் ஊற்றெனப்பெருகுகிறது. ஆனால் தலை திருப்பவில்லை. மாறாக ரசித்தேன் (குற்றவுணர்வுடன்). இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. இங்கு வன்முறை அதீதமாக்கப்பட்டு, அதன் அதீத நிலையில் தனது பயங்கரங்களை எல்லாம் இழந்து நிகழ்கலையாய் காட்சியளிக்கிறது. இன்னொன்றும் உள்ளது. நான் ரசித்த அதீத வன்முறை படங்கள் அனைத்துமே, தங்களுக்கும் நான் வாழும் நிகழ்தளத்திற்குமான உறவை வலிந்து துண்டித்துக்கொண்ட படைப்புகளே. கில் பில், 300, சின் சிட்டி (Sin City) போன்ற படங்களை சொல்லலாம். இவை அவற்றின் தொடக்கம் முதலே ஒரு வித அலாதி உலகில் புகுந்துகொள்வதால் அதன் வன்முறையை, குருதிப்பெருக்கை &#8220;விலகி நின்று&#8221; பார்க்க முடிகிறது. </p>
<p>திடீர் என கில் பில் பற்றி யோசிக்க வைத்தது சுந்தர காண்டம். வரம் பதிப்பகம் வெளியிட்ட “சுந்தர காண்டம்” ஒலிநூலினை கேட்டுக்கொண்டிருந்தேன். கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் பகுதியினை மூலத்தின் அடியொற்றி உரைநடையில் எழுதப்பட்ட பழ. பழனியப்பனின் நூலின் ஒலி வடிவம் இது. சுந்தரராமன் என்பவரின் அருமையான குரலுடன் வெளிவந்துள்ளது. சுந்தரகாண்டம் அனுமன் மகேந்திர மலையில் இருந்து புறப்படுவதில்(கடல் தாவு படலம்) தொடங்கி, கடல் அரக்கர்களை தாண்டி இலங்கை சென்று சீதையை கண்டு, அரக்கர்களுடன் போரிட்டு, இலங்கையை எறியூட்டி இராமனிடம் திரும்ப வந்து ”கண்டனென் கற்பினுக்கு அணியை” என்று சொல்வதில் (திருவடி தொழுத படலம்) முடிகிறது. சுந்தரராமனின் குரலில் கேட்டு முடித்தவுடன் மூலத்தை புரட்டிப்பார்த்தேன் (அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்தது. கங்கை புத்தக நிலைய வெளியீடு). ஓரளவிற்கு சரளமாய் வாசிக்க முடிந்தது. முடித்ததும் எனை அதிகம் ஈர்த்தது இப்பகுதியின் வன்முறை தான். வாசித்துக்கொண்டிருந்த பொழுதே ”கில் பில்”லையும் 300ஐயும் நினைவூட்டியது. முடிசூட்டு கோலத்தில் அமர்ந்திருக்கும் இராமனின் காலடியை வணங்கும் அமைதியின் உருவாய் திகழும் அனுமன் அல்ல இதில். போரின் அத்தனை பயங்கரங்களையும் “மறம்” என காணும் போர் வீரன் இந்த அனுமன். </p>
<p>அனுமன் அசோகவனம் புகுந்து சீதையிடம் கணையாழி பெற்று திரும்புகையில் இராவணனின் கவனத்தை கவர வேண்டி அசோகவனத்தை சிதைக்கிறான். அதை கண்ட அரக்கர்கள் தாக்க வர, அவர்களை கொல்கிறான். செய்தி இராவணன் செவி சென்று சேர்கிறது.  அரக்கர் படை, படைத்தளபதி சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள், இராவணனின் மகன் அக்ககுமாரன் என ஒவ்வொருவராக வந்து அனுமனுடன் போரிட்டு மடிகின்றனர். இறுதியில் போரிட வரும் இந்திரசித்தனின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இராவணனைப் போய் காண்கிறான். இப்படி போகிறது சுந்தரகாண்டம். இதன் தொடக்கத்திலே மகேந்திர மலையில் இருந்து இலங்கை நோக்கி பறக்க கால் ஊன்றிய பொழுது, கனம் தாளாது மலையின் வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது என்ற இடத்திலேயே இது ஒரு மாய தளத்துள் நுழைந்துவிடுகிறது (குரங்கு பறப்பதே அது தானே என்கிறீர்களா? <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' />  ) . அதன் பின் தொடரும் வன்முறைகளில் எல்லாம் விரவிக்கிடக்கும் இவ்வித அதீதங்கள் ரசிக்கவே வைக்கின்றன. செங்களம் படக்கொன்று&#8230; என தொடங்கும் குறுந்தொகை பாடல் ஒன்று. பாடல் முழுவதும் போரில் வழியும் குருதியால் சிவந்து நிற்கும். கிங்கரர் வதை படலம் தொடங்கி  சுந்தர காண்டம் முழுவதும் உதிரச்சிவப்பே கண்களை நிறைக்கிறது. எழுத்துருக்களெல்லாமும் சிவந்தது போல&#8230;.. </p>
<p>சில பாடல்கள்&#8230;</p>
<blockquote><p>பரு வரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்<br />சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;<br />ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-<br />அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.</p></blockquote>
<p>மலை அளவிற்கு உயர்ந்து நிற்கிறது அனுமன் தோள். அம்மலையிலிருந்து பாயும் அருவியைப் போல அவனை தாக்க வந்த அரக்கர்களின் குருதி வழிகிறது. ஒருவர் ஒருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைகள் தரையினில் உருள்கின்றன. மின்னலும் அஞ்சி அசையும் படி இருந்தது அனுமனின் அடி ஒவ்வொன்றும். </p>
<blockquote><p>ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்<br />கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்<br />சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்<br />தேடிக் கொன்றனன் சிலவரை &#8211; கறங்கு எனத் திரிவான்.</p></blockquote>
<p>ஓடி கொன்றான் சிலரை; உடலோடு உடல் இடித்துக்கொன்றான் சிலரை; நெடிய மரத்தினை கொண்டு அடித்துக்கொன்றான் சிலரை; அங்கு விழுந்து கிடந்த பிணங்களினூடே யாரேனும் உயிரோடிருக்கின்றனரா என தேடிக்கொன்றான் சிலரை &#8211; சுழற்காற்று போல திரிந்த அனுமன்.</p>
<p></p>
<blockquote><p>சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,<br />நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப<br />ஆறு போல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு<br />ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை.</p></blockquote>
<p>சேறும் வண்டலும் போல மூளையும் சதையும் மிதக்க அந்த நெடிய தெருவெல்லாம் வெள்ளம் வந்த ஆறு போல பாய்ந்தோடிய குருதி அனுமனின் கால்களால் அலைக்கப்பட்டு, இலங்கை முடிவின்றி வாயிலிருந்து உதிரம் உமிழ்வதை போல பாய்ந்தோடியது. </p>
<p></p>
<blockquote><p>தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து<br />உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்<br />கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்<br />தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல் &#8211; சிதறி</p></blockquote>
<p>மரம் எல்லாம் உடல்; திண்ணை எல்லாம் உடல்; தெரு முனைகளில் எல்லாம் உடல்; கடல் எல்லாம் உடல்; ஊர் நடு எல்லாம் உடல்; ஆகாயம் எல்லாம் உடல்; தெரு எல்லாம் உடல்; தேசமெல்லாம் உடல் &#8211; சிதறிக்கிடந்தன. </p>
<blockquote><p>ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்; -<br />தான் எலாரையும், மாருதி சாடுகை தவிரான்,<br />மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்<br />வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர் &#8211; சுற்றி</p></blockquote>
<p>உடல்களில் இருந்து உயிரை பிரித்து எடுத்துச்செல்லும் காலன் ஓய்ந்தே விட்டான். எல்லாரையும் அடித்துக்கொல்வதை அனுமன் நிறுத்தவேயில்லை. அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிர்கள் விண்மீன்களில் எல்லாம், மேகமெல்லாம், அதுக்கும் மேலே மேலே வானமெல்லாம்&#8230; அதையும் தாண்டி அலைந்துகொண்டிருந்தன. </p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/195/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/195/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/195/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/195/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/195/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/195/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/195/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/195/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/195/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/195/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=195&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/09/28/bloodypost/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காட்சியாய் வாழ்தல்</title>
		<link>http://angumingum.wordpress.com/2008/09/22/randy_alice/</link>
		<comments>http://angumingum.wordpress.com/2008/09/22/randy_alice/#comments</comments>
		<pubDate>Sun, 21 Sep 2008 21:00:28 +0000</pubDate>
		<dc:creator>Siddharth</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஆலிஸ்]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[ராண்டி பாஷ்]]></category>
		<category><![CDATA[oops]]></category>

		<guid isPermaLink="false">http://angumingum.wordpress.com/?p=188</guid>
		<description><![CDATA[&#8220;கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம்.  இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.&#8221;
- ராண்டி பாஷ்  [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007).



ராண்டி பாஷ் &#8211; குடும்பத்துடன்.
கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தெரிந்தது. அதற்கு முன் ராண்டி ஒரு பேராசிரியர், விர்ச்சுவல் ரியாலிட்டியில் உலகறிந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=188&subd=angumingum&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><blockquote><p>&#8220;கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம்.  இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.&#8221;<br />
- ராண்டி பாஷ்  [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007).
</p>
</blockquote>
<p><a href="http://angumingum.files.wordpress.com/2008/09/file.jpeg"><img src="http://angumingum.files.wordpress.com/2008/09/file.jpeg?w=308&#038;h=411" alt="" title="file" width="308" height="411" class="alignnone size-full wp-image-189" /></a><br />
ராண்டி பாஷ் &#8211; குடும்பத்துடன்.</p>
<p>கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தெரிந்தது. அதற்கு முன் ராண்டி ஒரு பேராசிரியர், விர்ச்சுவல் ரியாலிட்டியில் உலகறிந்த ஆளுமை, கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் விர்ச்சுவல் ரியால்லிட்டி பாட திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர், ஆலிஸ் என்ற மென்பொருளின் உருவாக்க குழுவை கட்டமைத்துக்கொண்டிருந்தவர். ராண்டி பாஷ் சென்ற மாதம் (ஜூலை 25, 2008) இறந்துவிட்டார்.</p>
<p>மீள்பார்வையில் ஒன்று தெரிகிறது. இன்று ராண்டியின் சாதனைகள் அனைத்தும் (ஒன்றை தவிர) அவரது புற்றுநோய்க்கு முன்னமே தொடங்கப்பட்டுவிட்டன. பின் ஏன் இந்த கட்டுரை? உலகில் எத்தனையோ பேருக்கு புற்றுநோய் வருகிறது. ராண்டியில் அப்படி என்ன சிறப்பு? ஒன்று இருக்கிறது. ராண்டி தொடங்கிய எந்த பணியும் புற்றுநோயின் காரணம் நிறுத்தப்படவில்லை. ராண்டியின் வாழ்வில் புற்றுநோய் தடைக்கல்லாக அல்ல, ஒரு கிரியாஊக்கயாகவே செயல்பட்டது. மெலும் துரிதமாய் நிகழ்ந்தன பணிகள். தனக்குப்பின் யார் தனது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப் போகின்றனர் என்பதை குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடிந்தது அவரால். மரணச்செய்தியை ஊக்கச்சக்தியாக மாற்றியது, மரணத்தினை கடைசி கணம் வரை கண்ணோடு கண் பார்த்தது இவை தான் ராண்டியின் ஆகப்பெரிய சாதனைகளாக எனக்கு தோன்றுகிறது. புனைவுகளில் மரணத்தை நோக்கி புன்முறுவலிட்டவர்களின் பட்டியல் நீளமானது. அது புனைவு என்பதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கம் ஏற்படுத்தாது. ஆனால் நம்மிடையே வாழும் ஒரு மனிதர் இச்செயலை புரிகையில் &#8220;அவன் மானுடன், இது சாத்தியமாகி இருக்கிறது அவனுக்கு. அதனால் நானும் ஓர் மானுடன் என்பதில் பெருமை கொள்கிறேன்&#8221; என்ற மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. எங்கோ அமெரிக்காவில் வாழ்ந்த ராண்டி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் கண்கள் பனித்தது நாம் ஏதோ ஓர் இழையினால் பின்னப்பட்டுள்ளோம் என்பதனால் தான்.</p>
<p>ஆலிஸ் பற்றி சிறிது பேசலாம்.</p>
<p>ஒவ்வொரு வருடமும் ஆண்டு விடுமுறை தொடங்கியதும் தொடங்கிவிடும் எந்த ஊருக்கு போவது என்ற விவாதம். ஊர் என்றால் அம்மா ஊரான மதுராந்தகம், அப்பா ஊரான திருவண்ணாமலை, இரண்டில் ஒன்று. இரண்டுக்குமே தாம்பரம் வழியாகத்தான் போக வேண்டும். தாம்பரத்தில் ஒரு கண் தெரியாதவர் கைக்குட்டைகள் விற்றபடி பேருந்தில் ஏறுவார். கைக்குட்டை மிக மிக சுமார் ரகம் தான். ஆனாலும் அதை கடமையாக வாங்குபவர்கள் இருவராவது இருப்பார்கள் பேருந்தில். அங்கு கைக்குட்டையின் தரத்தினை தீர்மானித்தது கைக்குட்டை அல்ல, விற்றவரின் ஊனம். ஆலிஸ் பற்றி பேசுகையில் இது நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். </p>
<p>ஆலிஸ் என்ற இந்த நிரலின் பயன்பாட்டினை உணர ராண்டி பாஷின் புற்றுநோய் குறித்து அறிந்திருக்க வேண்டியதில்லை. தன் பலத்திலேயே நிற்கும் தகுதி ஆலிஸுக்கு உண்டு. ஆலிஸ் என்பது சிறு வயதினருக்கு கணினி நிரலாக்கத்தின் (Programming) (குறிப்பாக பொருள் சார் நிரலாக்கத்தின் [Object Oriented Programming]) அடிப்படைகளை விளையாட்டு முறையில் கற்றுத்தரும் ஒரு நிரல். அமெரிக்காவில் சில ஆண்டுகளாக கல்லூரிகளில் கணினி துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்துள்ளது. கணினி நிரல் உருவாக்கம் குறித்த ஒரு வித ஒவ்வாமை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு உருவாகிவிடுவதாலேயே இது நிகழ்வதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆக பிரச்சனையின் தீர்வு பள்ளியில் கணினியினை ஆர்வமூட்டும் வகையில் கற்றுத்தருவது தான். இதை சரி செய்வதென முடிவெடுத்த ராண்டி உருவாக்கிய நிரல் தான் ஆலிஸ்.</p>
<p>ஆலிஸ் மூலம் நாம் நிரல்களை &#8220;எழுதலாம்&#8221;, ஒரு வரி கூட எழுதாமல். ஆலிஸ் பற்றி அறிந்துகொள்ள பொருள் சார் நிரலாக்கம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். பொருள் சார் நிரலாக்கம் (Object Oriented Programming) என்ற நிரல் உருவாக்க கோட்பாட்டின் படி அனைத்துமே பொருட்கள் தாம். ஒவ்வொரு பொருளுக்கும் சில தன்மைகள் (Properties) மற்றும் செயல்பாடுகள் (Behaviour) உண்டு. பொருட்கள் தத்தமக்குள் நிகழ்த்தும் உறவாடல்களே ஒரு நிரலின் நிகழ்வுகளாய் விரிகின்றன. உதாரணத்திற்கு, வங்கி செயல்பாட்டிற்கான நிரல் உருவாக்க, அந்த &#8220;சிக்கல் களத்தில்&#8221; (Problem Space) என்ன பொருட்கள் இருக்கிறதென பார்க்க வேண்டும். வங்கி கணக்கு என்பது ஒரு பொருள். வங்கி கணக்கிற்கு வைப்புத்தொகை (Balance) என்பது ஒரு தன்மை. பணம் கணக்கிற்கு உள்ளே வருவதும் (Deposit), வெளியேறுவதும் (Withdrawal) செயல்பாடுகள். ஒரு பரிவர்தனை (transaction) நிகழ ஒரு கணக்கிலிருந்து மற்றோர் கணக்கிற்கு பணம் செல்ல வேண்டும். அதாவது இரு &#8220;வங்கி கணக்கு&#8221; பொருட்கள் தமக்குள் உறவாட வேண்டும். இதை நான் இப்போது விளக்கியது போலவே 6வது படிக்கும் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்தால் என்ன ஆகும்?</p>
<p>இங்கு தான் ஆலிஸ் முக்கிய இடம் வகிக்கிறது. பொருள் சார் நிரலாக்கத்தில் அடிப்படைகளை கற்றுத்தர ஆலிஸ் பயன்படுத்தும் உத்தி இது தான். ஆலிஸை திறந்தவுடன் நம்முன் ஒரு &#8220;உலகம்&#8221; இருக்கும். இப்போதைக்கு அந்த உலகத்தில் எதுவும் இல்லை. வெறும் பாழ் [படம் 1]. இவ்வுலகில் நாம் வீடு, மனிதன், பூச்சி என பல்வேறு விதமான பொருட்களை சேர்க்கலாம். ஒவ்வொரு பொருளின் தன்மையை மாற்றலாம். செயல்பாடுகளை சேர்க்கலாம். உதாரணமாக சூரியன் என்ற பொருளை சேர்க்கலாம். சூரியனுக்கு &#8220;இங்கு இருந்து இவ்வளவு தூரம் நகர்ந்து அதோ மலைக்கு பின்னே போய் மறை&#8221; என்ற செயல்பாட்டினை தரலாம். அது நிகழும் போதே &#8220;உலகில்&#8221; &#8220;வெளிச்சத்தை குறைத்துக்கொள்&#8221; என்ற செயல்பாட்டினை தரலாம். விளையாட்டாக பாவித்தே இதை குழந்தைகள் செய்யலாம். ஆனால் இவற்றின் மூலம் அவர்கள் நிரலாக்கத்தின் பல அடிப்படைகளை கற்காமலேயே உள்வாங்கிக்கொள்கிறார்கள்.  ஒவ்வொரு நிரலின் முடிவும் ஒரு animationஆக காட்சியளிக்கும் [படம் 2]. இவற்றை avi கோப்புகளாகவும் சேமிக்க முடியும் . ஆலிஸ் குழு இப்போது அடுத்த பதிப்பான 3.0வை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். 2.0 குறிப்பாக எந்த ஒரு கணினி மொழியையும் கற்றுத்தருவதில்லை. நிரலாக்கத்தின் பொது விதிகளை மட்டுமே கற்றுத்தருகிறது. ஆனால் ஆலிஸ் 3.0 மூலம் நாம் ஜாவா மொழியை கற்றுக்கொள்ள முடியும்.</p>
<div id="attachment_190" class="wp-caption alignnone" style="width: 730px"><a href="http://angumingum.files.wordpress.com/2008/09/alice1.png" target="_blank"><img src="http://angumingum.files.wordpress.com/2008/09/alice1.png?w=720&#038;h=393" alt="ஆலிஸ் - பாழ் உலகம்" title="alice1" width="720" height="393" class="size-full wp-image-190" /></a><p class="wp-caption-text">ஆலிஸ் - பாழ் உலகம்</p></div>
<p>படம் 1 &#8211; &#8220;பாழ்&#8221; உலகம்.</p>
<p><a href="http://angumingum.files.wordpress.com/2008/09/alice_world.jpg" target="_blank"><img src="http://angumingum.files.wordpress.com/2008/09/alice_world.jpg?w=644&#038;h=538" alt="" title="alice_world" width="644" height="538" class="alignnone size-full wp-image-191" /></a></p>
<p>படம் 2 : நான் &#8220;எழுதிய&#8221; நிரல் &#8211; காட்சிக்கோப்பாக</p>
<p>பத்து சதவிகித அமெரிக்க பள்ளிகள் ஆலிஸ் மூலம் கணினி நிரலாக்கத்தினை கற்றுத்தருவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறார்கள். இந்தியாவிலும் இந்த நிரலினை பயன்படுத்தி கற்றுக்கொடுத்தால் நிச்சயம் பலன் தரும் என்றே தோன்றுகிறது.</p>
<p>ராண்டி பாஷ் 2007 செப்டம்பர் மாதம் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் &#8220;கடைசி உரை&#8221; (Last Lecture) என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். இது இணையத்தில் மிகப்பரவலாக பார்க்கப்பட்டது. அந்த உரையில் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார். &#8216;மோசஸின் வாக்களிக்கப்பட்ட பூமி (Promised Land) போல தான் எனக்கு ஆலிஸ் 3.0. அங்கு தேனும் பாலும் ஓடுகிறது என எனக்கு தெரியும். உங்களுக்கு வழியையும் காட்டுவேன். ஆனால் நீங்கள் அங்கு சென்று சேரும் போது நான் இருக்க மாட்டேன்&#8221;. அடுத்த வருட கோடையில் தான் ஆலிஸ் 3.0 வெளிவரவிருக்கிறது. ராண்டி கைகாட்டிய திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது அவர் உருவாக்கிய குழு.</p>
<p>சிறு வயதில் தினமணி கதிரில் பார்த்த ஒரு புகைப்படம். பசுமை சூழ்ந்த குளம். அதில் ஒரு பெண் குளித்துக்கொண்டிருக்கிறாள். தன் நீண்ட மயிற்கற்றைகளை காற்றில் எம்ப விட, அவற்றிலிருந்து மேலெழும் நீர்த்திவலைகள் அந்தரத்தில் உறைந்து நிற்கின்றன. கண்ணைப்பரிக்கும் அழகு மிலிரும் படம் அது. அதன் கீழ் இந்த வாசகம். கண நேர வாழ்வெனினும் காட்சியாய் வாழ். ராண்டி பாஷின் வாழ்க்கையை நோக்கினால் இது தான் பிரதானமாய் தெரிகிறது. கண நேர வாழ்வெனினும் காட்சியாய் வாழ்தல்.</p>
<p>சுட்டிகள் :</p>
<p>ராண்டி பற்றிய விக்கி பக்கம் : <a href="http://en.wikipedia.org/wiki/Randy_Pausch">http://en.wikipedia.org/wiki/Randy_Pausch</a><br />
ராண்டியின் &#8220;கடைசி உரை&#8221; : <a href="http://en.wikipedia.org/wiki/Really_Achieving_Your_Childhood_Dreams">http://en.wikipedia.org/wiki/Really_Achieving_Your_Childhood_Dreams</a><br />
கடைசி உரை கூகுல் வீடியோவில் படமாக :<a href="http://video.google.com/videoplay?docid=-5700431505846055184"> http://video.google.com/videoplay?docid=-5700431505846055184</a><br />
ஆலிஸ் தளம் : <a href="http://www.alice.org">http://www.alice.org</a></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/angumingum.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/angumingum.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/angumingum.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/angumingum.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/angumingum.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/angumingum.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/angumingum.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/angumingum.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/angumingum.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/angumingum.wordpress.com/188/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=angumingum.wordpress.com&blog=48880&post=188&subd=angumingum&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://angumingum.wordpress.com/2008/09/22/randy_alice/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f9e27e44d1a348cba9fc875e06d0e95b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">angumingum</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2008/09/file.jpeg" medium="image">
			<media:title type="html">file</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2008/09/alice1.png" medium="image">
			<media:title type="html">alice1</media:title>
		</media:content>

		<media:content url="http://angumingum.files.wordpress.com/2008/09/alice_world.jpg" medium="image">
			<media:title type="html">alice_world</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>