எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் : ஆண்டாள் திருப்பாவை – 19

2007 ஜூலை 30
by Siddharth

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

குத்து விளக்கு எரிய, யானைத்தந்தத்தினால் செய்த கால்களையுடைய கட்டிலின் மேல், மெத்தென இருக்கும் மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக பூவினை முடிந்த கூந்தலுடைய நப்பின்னையின் முலைகளின் மேல் கைகளை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா, வாயை திறந்து பேசு. மையெழுதிய கண்களையுடையவளே, நீ உன் கணவனை எவ்வளவு நேரமாயினும் எழுப்ப மாட்டாய் பார். சிறிதளவும் கூட அவனைப் பிரிந்திருக்க முடியாது உன்னால். நான் கூறுவது தத்துவமொன்றும் அல்ல,
உண்மை.

(எனக்கு மிகவும் பிடித்துப்போன பாடல்களில் ஒன்று இது. இதன் ஓசைக்காகவே).

3 Responses leave one →
  1. 2007 செப்டம்பர் 21

    I cant wait for your next Thiruppavai vilakkam. It is simple and easy to understand. Good job.

  2. 2007 டிசம்பர் 6
    மாரியப்பன் permalink

    மிகவும் நல்ல பாடல். நன்றி

  3. 2008 மார்ச் 16
    T Panneerselvam permalink

    Vaithukkidantha malarmaarbaa enrathu vaayaitthan kurikkumenbathu en karuthu: aenenraal, vaithukkidantha malarmaarbaa VAAYthiravaay enru koorappattullathu!

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS