அம்பரமே தண்ணீரே : ஆண்டாள் திருப்பாவை – 17

2007 ஜூலை 27
by Siddharth

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

உடையும் நீரும் உணவும் அளிக்கும் எங்கள் கடவுளே! நந்தகோபாலா! எழுந்திரு.

இளந்தளிர் போன்ற பெண்களுக்கெல்லாம் கொழுந்தானவளே! குலவிளக்கே! யசோதா! நீயாவது எழுப்பேன்.

வாமன அவதாரமெடுத்து ஓங்கி வளர்ந்து வானை அறுத்து உலகினை அளந்த கடவுளே! உறங்காதே, எழுந்திரு.

செம்பொன் கழலினை அனிந்த கால்களையுடைய செல்வா! பலதேவா (பலராமன்)! நீயும் உன் தம்பியும் உறங்காதீர். விழித்திடுங்கள்.

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS