கடந்து சென்ற கவிதைகள் சில
மனதிற்கு மிக அருகில் வந்த கவிதைகளை, எக்காலத்தைச் சேர்ந்தவையாயினும், அவற்றை “கடந்து சென்ற கவிதைகள் சில” என வகைப்படுத்தி இங்கு பதித்து வைக்கலாம் என பார்க்கிறேன். தேவதைக்கதைகளில் இலக்கறியாது பயணிக்கும் சிறுமி போகும் வழியெல்லாம் அடையாளத்திற்கு ரொட்டித்துண்டுகளை வீசியபடி போவதில்லையா…
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்- ஆண்டாள் (திருப்பாவை #23)
மழை. மலைக் குகையில் உறங்கும் சிங்கம் விழித்து சோம்பல் முறித்து பிடறி மயிர் பொங்க சோம்பல் முறித்து கர்ஜித்து புறப்படுவதைப் போல நீ விழி (பூவை ) பூ வண்ணனே. உன் கோயிலுக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருள் புரிக.
போன மாதத்தில் ஒரு நாள்.கவிஞர் பாம்பாட்டி சித்தன், நான், சுந்தர்(மஞ்சூர் ராசா) மூவரும் குவைத்தின் பிரதான கடைவீதியில் இலக்கற்று சுற்றிக்கொண்டிருந்தோம். பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில் பக்தி இலக்கியம் பக்கம் திரும்பியது. சௌரி கண்களை மூடிக்கொண்டு விரலினை காற்றில் அசைத்த படி அவருக்கே உரிய ஒரு வித ராக பாவத்துடன் இந்த கவிதையை கூறினார். முடித்ததும் வரிக்கு வரி சிறு விளக்கம். பாடல் அப்படியே ஒட்டிக்கொண்டது மனதில். மாரி மலை முழைஞ்சில்…. மாரி மலை முழைஞ்சில்… மந்திரம் போல ஒலித்துக்கொண்டே இருந்தது இவ்வரி. கருத்து அல்ல. அந்த மொழியே முதலில் கவர்ந்தது. பிரவாகமாய் பொழியும் மொழி. பாரதியின் திருப்பள்ளியெழுச்சியில் பொழியுமே… அது போன்றதொரு பிரவாகம். திருப்பாவை படிக்க இந்த பாடலே காரணமாக அமைந்தது….
இது எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்.. மிகவும் சுவையான பாடல்..
More than half of da poem is abt lion.
Simha gathi of Lord Ranganaatha is
described here